Skip to main content

சட்டவிரோத ஒளிபரப்பு; இந்தியாகாஸ்ட் நிறுவனம் கொடுத்த புகாரில் நால்வர் கைது!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

four men arrested in case registered by indiacast

 

ராஜஸ்தானின் பிவாடி பகுதிகளில் செயல்படுகிற நர்னால் கேபிள் சர்வீசஸ், ஃபவுலாட் வடம் நிறுவனம் உட்பட சில ஆபரேட்டர்கள் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் இந்தியாகாஸ்ட் நிறுவனம், அதன் பைரஸி ஒழிப்பு முகமையான 'காமக்யா' மூலம் பதிவு செய்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

TV18 பிராட்காஸ்ட் லிமிடெட் மற்றும் வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்-க்கு சொந்தமான இந்தியாகாஸ்ட் தளம் பைரஸிக்கு எதிராகத் தொடர்ந்து இயங்கிவருகிறது. அந்தவகையில், ராஜஸ்தானில் TV18 மற்றும் வயாகாம்18 சேனல்களை அனுமதியின்றி சட்டவிரோதமாக ஒளிபரப்பிய குற்றத்திற்காக 1860ம் ஆண்டின் இந்தியக் குற்றவியல் சட்டம் மற்றும் 1957ம் ஆண்டின் காப்புரிமை சட்டத்தின்கீழ் அந்நிறுவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தது.   

 

இப்புகார்களின் அடிப்படையில், ஆறுக்கும் அதிகமான இடங்களில் அதிரடி சோதனை நடத்திய போலீஸார், அனுமதி பெறாத பகுதிகளில் சேனல் ஒளிபரப்பும் பயன்படுத்தப்படும் டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் நோடுகள் போன்ற சாதனங்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக, இதுவரை நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் நான்கு பேரும் 5 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 

இச்சம்பவம் குறித்து இந்தியாகாஸ்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், "ஒளிபரப்பு திருட்டைத் தடுப்பதற்கும், ஒழிப்பதற்குமான இந்த செயல் முயற்சியில் விரைவான மற்றும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கான பிவாடி காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஒளிபரப்புக்கான உள்ளடக்கத் திருட்டு என்பது ஊடக தொழில்துறைக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் கவலையளிக்கும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில், ஒளிபரப்பு நிறுவனத்தின் வருவாயை இது நேரடியாக பாதிப்பது மட்டுமன்றி, ஒட்டுமொத்த உள்ளடக்க வழங்கல் சங்கிலித் தொடரில் மேற்கொள்ளப்படும் உழைப்பையும் மதிப்பிழக்கச் செய்துவிடுகிறது. வயாகாம்18 மற்றும் TV18 நெட்வொர்க் உடன் இணைந்து இந்தியாகாஸ்ட் தொடர்ந்து பைரஸியை எதிர்த்துப் போரிடும். சட்டப்படி அணைத்து வழிமுறைகளையும் பின்பற்றி சேனல் உள்ளடக்கங்களைப் பாதுகாக்கும்.” என்றார்.

 

உரிய அனுமதியின்றி தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்பி வந்த THOP TV செயலிக்கு எதிராகப் புகார் அளித்து அந்த செயலியை நடத்தும் நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முதலில் துவங்கியதும் வயாகாம்18 நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய அனுமதியின்றி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கான ஆன்லைன் பார்வையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் THOP TV வழங்கிவந்ததாக அந்நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாக பல நிறுவனங்களுக்கும் கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இப்புகாரின் மீதான முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மகாராஷ்ட்ர மாநில காவல்துறையின் சைபர் செல் THOP TV-ன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரைக் கைது செய்தது.

 

61க்கும் மேற்பட்ட சேனல்களை பல்வேறு தளங்களுக்கும் முறைப்படி விநியோகித்துவரும் இந்தியாகாஸ்ட் நிறுவனம், அது நிர்வகிக்கும் அனைத்து குழுமங்களின் சேனல்கள் மற்றும் உள்ளடக்கத்தை உலகளவில் விநியோகம் செய்வதோடு, அவற்றை வணிகப்படுத்துதல், விளம்பர விற்பனை, டிஜிட்டல் ஊடக விநியோகம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.