Published on 18/09/2019 | Edited on 18/09/2019
புகையிலையில் கொண்ட சிகரெட்டுகளை மாற்றாக கொண்டுவரப்பட்ட இ-சிகரெட்டுகள் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதால், அதற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவ செய்துள்ளது.
![e cigarettes banned in india](http://image.nakkheeran.in/cdn/farfuture/6iPVgGnDpolbiHx2c-0R2t371-PuC1TGeZDqqo_7c-4/1568803025/sites/default/files/inline-images/ecig.jpg)
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், வரும்காலத்தில் இந்த இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வரைவு அவசரச் சட்டத்தில், இ சிகரெட் தடையை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.