Skip to main content

புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் விமான நிலையம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

narendra modi

 

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் 260 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். புத்தர்பிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்ரீகர்களுக்கு வசதியாக இந்த விமான நிலையம் அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் இந்த விமான நிலையம் செயல்படும்.

 

இதனைக் குறிக்கும் வகையில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவில், இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்திலிருந்து வந்த விமானம், குஷிநகர் விமான நிலையத்தில் முதலில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் இலங்கையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினர் வருகை தந்தனர்.

 

இதற்கிடையியே, இந்த விமான நிலைய திறப்பு விழாவின்போது பேசிய பிரதமர் மோடி, ஆன்மீக பயணத்தில் ஆர்வமாக இருப்பதால் தனக்கு திருப்தியான உணர்வு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். குஷிநகர் விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியது வருமாறு,

 

குஷிநகர் சர்வதேச விமான நிலையம் என்பது பல தசாப்த கால நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் விளைவாகும். இன்று என் மகிழ்ச்சி இரண்டு மடங்காக உள்ளது. ஆன்மீக பயணத்தில் ஆர்வமாக இருப்பதால், எனக்குத் திருப்தியான உணர்வு ஏற்பட்டுள்ளது.

 

குஷிநகர் சர்வதேச விமான நிலையம் வெறும் விமான பயண இணைப்பாக இருக்காது. விவசாயிகள், கால்நடை பராமரிப்பாளர்கள், கடைக்காரர்கள், தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலதிபர்கள் என அனைவருமே இதன்மூலம் பயனடைவார்கள். இது வணிக சூழல் அமைப்பை உருவாக்கும்; சுற்றுலாத்துறை அதிகபட்ச நன்மைகளைப் பெறும். இது இங்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

 

அடுத்த 3 - 4 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், ஹெலிபோர்ட்டுகள் ஆகியவை அடங்கிய வலைப்பின்னலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அடுத்த சில வாரங்களில், டெல்லி மற்றும் குஷிநகர் இடையே ஸ்பைஸ் ஜெட் நேரடி விமான சேவையைத் தொடங்குகிறது என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இது உள்ளூர் பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் உதவும்.

 

நாட்டின் விமானத் துறையைத் தொழில் ரீதியாக நடத்துவதற்கும், வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும் ஏர் இந்தியா தொடர்பான ஒரு முக்கிய நடவடிக்கை சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்தியாவின் விமானத்துறைக்குப் புதிய ஆற்றலைக் கொடுக்கும்.”

இவ்வாறு பிரதமர் பிரதமர் மோடி தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.