Skip to main content

காதலியின் பல்லை வலுக்கட்டாயமாக பிடுங்கிய காதலன்...காரணம் இதுதான்...   

Published on 04/08/2018 | Edited on 04/08/2018
lover

 

அஹமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய கணவரை பிரிந்து காதலனுடன் 15 வருடமாக வாழ்ந்து வருகிறார். தற்போது இந்த பெண்ணின் காதலன், இவர் அழகாக இருந்தால் வேறொருவருடன் சென்றுவிடுவார் என்று சந்தேகப்படுவதால், அப்பெண்ணின் முற்பற்கள் இரண்டையும் பிடுங்கிவிட வேண்டும் என்று சித்தரவதை செய்துள்ளார். இதனால், வேறு எந்த ஆணும் அப்பெண்ணை பார்க்க மாட்டார்கள் என்பதால் இவ்வாறு செய்திருக்கிறாராம்.

 

அந்த 57 வயதுடைய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் இச்சம்பவத்துடன் நிற்காமல் கீதாபென்(55) என்னும் அந்த பெண்ணை வேலைக்கும் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிக்கொண்டு உடன் கீதாபென்னையும் அழைத்து சென்றுகொண்டிருக்கும்போது அவர் சித்தரவதைகளில் இருந்து மீள கீதாபென் ஆட்டோவை விட்டு கீழே விழுந்து தப்பித்துள்ளார்.  பின்னர் அபாயம் என்னும் பெண்கள் சேவை எண்ணுக்கு தொடர்புகொண்டு ஆலோசகர்களிடம் பேசியுள்ளார். அப்போது, "ஏற்கனவே என் கணவர் என் மீது சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தார் என்பதால்தான் இவரைக் காதலித்து அவருடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் இவரும் என் மீது சந்தேகப்பட்டு சித்தரவதை செய்கிறார்" என்று பகிர்ந்துள்ளார்.

 

இந்த இருவரும் அவர் அவரின் கணவன்,மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து 15 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். தொடக்கத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல் இருந்தவர், கடந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு நொடியும் அந்த பெண்ணின் மீது சந்தேகப்பட்டுள்ளார். முதலில் பற்களை பிடுங்கியவர். பின், வீட்டிலிருந்து அவர் யாரையோ பார்த்து பேசி பழகுகிறார் என்று ஜன்னல் கதவுகளை மூடிவிட்டார். தற்போது சந்தேகம் முற்றிப்போய் கீதாவை ஆட்டோ ரிக்ஷாவிலேயே தன்னுடனே வைத்து அழைத்து சென்று வந்துள்ளார். அவரின் தொல்லை தாங்கமுடியாமல் கடைசியில் கீழே விழுந்து தப்பித்துச்சென்று ஆலோசகரை அணுகியுள்ளார். ஆலோசகர்களும் சந்தேகத்திற்கு மருந்தில்லை, அவர்தான் யோசித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இறுதியில் அந்த ஆட்டோ ரிக்ஷாக்காரரிடம் கீதாவுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், அவரின் மீது சந்தேகப்படக்கூடாது" என்று எழுதி வாங்கியுள்ளனர்.      

                     

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Again a manslaughter; Terrible in Chennai

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.