Skip to main content

கரோனா பாதிப்புகளுக்கு நடுவே சவால் விடும் ஆம்பன் புயல்! முன்னெச்சரிக்கையை தீவிரப்படுத்தும் அரசு!!!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

Cyclone Amphan Update - 4.55PM

 

கரோனா வைரஸ் இந்தியாவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும்நிலையில், தற்போது உம்பன் புயல் அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.  


இதற்கிடையில் உம்பன் புயல் இன்று மேற்கு வங்கத்தின் திகா - வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதியில், 160 முதல் 170 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக்காற்றுடன் கரையை கடந்து வருகிறது. ஆம்பன் புயல் சுந்தரவனக் காடுகளை கடந்து மேற்கு வங்க உட்பகுதியில் மாலை 6 மணிக்கு வலுவிழக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் உம்பன் புயல் எச்சரிக்கையால் மேற்கு வங்கத்தில் மேலும் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல் ஒடிஷாவில் 1,58,640 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் என்.டி.ஆர்.எஃப் தலைவர் பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் ஃபானி புயலின் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

 

சார்ந்த செய்திகள்