Skip to main content

பொன்.மாணிக்கவேல் கூறியு இரண்டு அமைச்சர்கள்...விரைவில் வெளிப்படும்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கி வரும் சிலைக்கடத்தல் வழக்கில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு என்ற பொன்.மாணிக்கவேலின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை உருவாக்கி விட்டது.

 

ponmanikavel



சிலைக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் தீன தயாளன் கைது செய்யப் பட்டார். அவரை அந்த கடத்தல் சம்பவத்திலிருந்து தப்பிக்க வைப்பதற்காக அந்த வழக்கை விசாரித்த காதர்பாஷா என்கிற டி.எஸ்.பி. மீது சிலைக் கடத்தல் குற்றங்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான பொன். மாணிக்கவேல் வழக்குப் பதிவு செய்தார். தன் மேல் பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய் வழக்கு என காதர் பாஷா, காவல்துறை மேல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததுடன். "என் மீது பொய் வழக்குப் போட்டு தீன தயாளனை தப்பிக்க வைக்க பொன்.மாணிக்கவேல் முயற்சி செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வழக்கும் போட்டார். இந்நிலையில்தான், சிலைக் கடத்தலில் அதிகாரிகள், அமைச்சர்களுக்குத் தொடர்பிருக்கிறது என பொன்.மாணிக்கவேல் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் தனக்கு இடைஞ்சல் தருவதாக, பொன். மாணிக்கவேல் தரப்பிலிருந்து வெளிப்பட்ட குற்றச்சாட்டு, யார் அந்த அமைச்சர்கள் என்ற கேள்வியை எழுப்பியது.


இந்நிலையில், அந்த அமைச்சர்கள் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் என தனியார் சேனலில் செய்திகள் வெளியாகின. இதற்கு அமைச்சர்கள் இருவரும் மீடியாக்களிடம் நேரிலும் மறுப்பு தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட சேனல் குறித்து பிரஸ் கவுன் சிலில் புகார் தெரிவித்திருப்ப தாகவும் கூறினார்கள். அமைச்சர் சேவூர் ராமச் சந்திரனின் உறவினர்களிடம் பேசினோம். "அமைச்சரின் பெயர் பிளாஷ் நியூஸில் வெளிவந்தவுடன் அவர் முதல்வர் எடப்பாடியை தொடர்பு கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை அழைத்தார். மூவரும் கூடிப் பேசும் போது, "பொன்.மாணிக்க வேல் இரண்டு அமைச்சர்கள் என்றுதான் கூறியுள்ளார். யார் என சொல்லவில்லை. எனவே இந்த செய்தியை வெளியிட்ட தொலைக் காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சி.வி.சண்முகம் சொன்னார். அந்த தொலைக் காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பொன்.மாணிக்கவேல் சொல்லும் குற்றச்சாட்டுகளெல்லாம் முந்தைய ஜெ. ஆட்சியில் நடந்தவை. பழனி கோவில் விவகாரம் சசிகலா குடும்பம் சம்பந்தப்பட்டது. சேவூருக்கும் சிலைக் கடத்தல் விவகாரங்களுக்கும் தொடர்பில்லை என்றனர்.

  admk



இந்து அறநிலையத்துறையில் நடந்த விவகாரங்களுக்கும், காவல்துறையில் நடந்த விசாரணைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எப்படி சம்பந்தப்படுவார்' என அவரது தரப்பைச் சேர்ந்தவர்களும் மறுக்கிறார்கள். இதனிடையே, கோவில்கள் நிறைந்த மாவட்டத்தைச் சேர்ந்த உணவு அமைச்சர் காமராஜை பொன்.மாணிக்க வேல் குற்றம்சாட்டினாரா என்றும் விவாதிக்கப் பட்டது.


பொன்.மாணிக்கவேலுவுக்கு நெருக்க மானவர்களிடம் கேட்டபோது, ""யார் யார் என்பதை முதலமைச்சரும், சட்டத்துறை அமைச்சரும் அறிவார்கள்'' என்றனர். அறநிலையத்துறை வட்டாரங்களில் கேட்ட போது, "சசிகலா ஆதரவுடன் கோலோச்சிய அறநிலையத்துறை அதிகாரி தனபால் அவரால் பழிவாங்கப்பட்ட அதிகாரிகள் என இருதரப்பினரும் மோதிக் கொள்ளும்போது வெளியாகும் தகவல்களை வைத்துக் கொண்டுதான் பொன். மாணிக்கவேல் விசாரணை செய்கிறார். யாருக்கும் கட்டுப்படாத அதிகாரியான அவருக்கு ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை கட்டுப்படுத்த பல வழிகளில் மாநில அரசு முயன்றது. சசிகலா குடும்பம் + பெரிய வி.ஐ.பி.க்களை எல்லாம் பொன். மாணிக்கவேல் சிக்க வைக்க முயற்சி செய்தபோது, முதல்வர் அலுவலகத்தின் உத்தரவுப்படி தலையீடுகள் நடந்தன, அமைச்சர்களும் தலையிட்டார்கள். எல்லாம் விரைவில் வெளிப்படும்'' என்கிறது.

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கேட்கும் நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுப்பதில்லை” - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 EPS alleges Centre government never gives the requested funds

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிக வெப்பம் காரணமாக அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் பல இடங்களில் நீர் மோர் பந்தலை வைக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 4 இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து செய்தியாளர்களைச் சந்தித்துp பேசினார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதிலும் நிதியைக் குறைத்து தான் வழங்கினார்கள். திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6,000 தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது ” எனத் தெரிவித்துள்ளார்.