Skip to main content

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பெண் நிருபர் அதிர்ச்சி புகார்!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பத்திரிக்கை நிருபர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்த போதே அவர் மீது பலரும் பாலியல் புகார் கூறினார்கள். இதுதொடர்பாக பெரிய சர்ச்சை எழுந்த நிலையிலும், அவர் அதிரடியாக தேர்தலில் வெற்றி பெற்றார். 



இந்நிலையில், அமெரிக்க பெண் பத்திரிக்கையாளரான கர்ட்னி ப்ரீல், " டூநைட் அட் 10 கிக்கிங் பூஸ் அண்டு பிரேக்கிங்" என்ற புத்தகத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்.  அமெரிக்க அதிபர் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துகள் அதில் இடம் பெற்றுள்ளன என்று கூறப்படுகின்றது. இதுதொடர்பாக அவர் கூறும்போது, " ட்ரம்ப் அமெரிக்க அதிபர் அவதற்கு முன்பு அழகி போட்டியினை நடத்தினார். அதில் நான் நடுவராக பங்கேற்க முயற்சித்தேன். அதற்காக என்னை தொடர்பு கொண்ட ட்ரம்ப், மற்றொரு தொலைக்காட்சியில் பங்கெடுத்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க கூடாது என்று என்னிடம் தெரிவித்தார். மேலும் என்னுடைய அலுவலகம் வா, நாம் இருவரும் முத்தமிடலாம்" என்று ட்ரம்ப் கூறியதாகவும் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்