Skip to main content

பட்டத்தோடு வானில் பறந்த மூன்று வயது சிறுமி... திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

child stuck in kite at taiwan kite festival

 

தைவானில் பட்டம் விடும் திருவிழாவின்போது மூன்று வயது சிறுமி ராட்சத பட்டதில் சிக்கி வானில் பரந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

 

தைவானின் நான்லியோ கடற்கரையில் பட்டம் விடும் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்தவகையில் தற்போது நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு ராட்சத பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்தனர். அப்போது பட்டம் விடும் பகுதியில் நின்றுகொண்டிருந்த சிறுமி, பட்டத்தின் வாலில் சிக்கிப் பட்டதோடு இழுத்துச் செல்லப்பட்டார். திடீரென பட்டத்துடன் வானில் பறந்த சிறுமியைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காற்றில் சில மீட்டர் உயரம் மேலே சென்ற அந்தப் பட்டம், காற்றின் வேகத்தால் தொடர்ந்து பறந்துகொண்டே இருந்துள்ளது.

 

இதனால் அச்சமடைந்த அந்தச் சிறுமி அழுது கூச்சலிட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் சிறுமியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பயத்திலும் பட்டத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட அந்தச் சிறுமி, பட்டத்துடனேயே சில நிமிடங்கள் பறந்துள்ளார். சிறிது நேரத்தில் காற்றின் காரணமாகப் பட்டத்தின் வால் தரையை நோக்கி வர, கீழே காத்திருந்த மக்கள் அவரைப் பத்திரமாகப் பிடித்து மீட்டனர். இதில் சிறுமிக்குச் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதால் சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பட்டம் விடும் திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தைவானுக்கு உறுதியளித்த அமெரிக்கா; அதிர்ச்சியில் சீனா!

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

china taiwan america recent international issue 

 

சீனா தைவான் நாட்டை தங்களது நாட்டின் ஒரு பகுதி என கூறி வருவதுடன் அதனை நிர்வாகரீதியில் தங்களுடன் இணைக்கும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

இதற்கிடையில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது நாட்டின் முக்கியத் தலைவர்களை அங்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் அப்போதைய சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி என்பவரை தைவான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்போது தைவான் கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்துவது போன்ற பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தற்போதைய அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திப்பதற்காக தைவான் அதிபர் சாய் இங்வென் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதனை அறிந்த சீனா இவர்களின் இந்த சந்திப்பு நடைபெறக் கூடாது என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், சீனாவின் எதிர்ப்பையும் மீறி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நூலகத்தில் தைவான் அதிபர் சாய் இங் வென், கெவின் மெக்கார்த்தி ஆகிய இருவரும் சந்தித்து பேசினர்.

 

அப்போது தைவான் மீதான சீனாவின் அச்சுறுத்தலை தைவான் அதிபர் ஒப்புக்கொண்டதாகவும் தைவானுக்கு முழு ஆதரவை அமெரிக்கா வழங்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவான் கடல் பகுதியில் சீனா மற்றும் அமெரிக்கா சார்பில் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயலானது சீனாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

தைவானை அச்சுறுத்தும் சீனா; பாதுகாப்பிற்கு வருமா அமெரிக்கா? - ஜோ பைடன் பதில்!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

JOE BIDEN

 

சீனாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாகத் தைவான் தனி நாடாக உருவானது. இருப்பினும் சீனா தைவானை தங்கள் நாட்டில் இருந்து பிரிந்த ஒரு மாகாணமாகவே கருதுவதோடு, மீண்டும் அந்தநாட்டை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர முயன்று வருகிறது.

 

இதற்காகச் சீனா படைபலத்தையும் உபயோகிக்கத் தயாராகவே உள்ளது. இந்தநிலையில் அண்மைக்காலமாகத் தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் அதிக அளவிலான சீனா விமானங்கள் ஊடுருவி அச்சுறுத்தி வருகின்றன. இதற்கிடையே அண்மையில் சீன அதிபர் தைவான் குறித்துப் பேசும்போது, 'தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணி நிறைவேற்றப்பட வேண்டும்" எனவும் 'தைவான் மக்களின் நலனுக்காக அமைதியான வழியில் அந்த இலக்கை அடையவேண்டும்" எனவும் தெரிவித்தார்.

 

இருப்பினும் தொடர்ந்து சீனா, போர் விமானங்கள் தைவானை அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் சி.என்.என் ஊடக நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சீனா தைவானைத் தாக்கினால், அமெரிக்கா தைவானைப் பாதுகாக்குமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு ஜோ பைடன், ஆம்...நாங்கள் அதற்காக உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். தைவான் தன்னை பாதுகாத்துக்கொள்ள வழிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்தநாடு தொடர்பான அமெரிக்காவின் கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால் தைவானை நேரடியாகப் பாதுகாப்பதாக அமெரிக்கா எப்போதும் தெரிவித்ததில்லை. இந்த சூழலில் ஜோ பைடன் தைவானைச் சீனா தாக்கினால் பாதுகாப்போம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அதேநேரத்தில் தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.