Skip to main content

வாக்னர் குழுத் தலைவர் தலைமறைவு; அதிபர் புதின் சொல்வது என்ன?

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Wagner group leader absconds; What does President Putin say?

 

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக எந்த புரட்சியும் செய்ய முடியவில்லை என்று ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் ஆயுதக் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனியார் படையின் கிளர்ச்சி குறித்த விசாரணையை ரத்து செய்வதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இன்று வரை போர் நடந்து வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி  முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த போரில் ரஷ்யா சார்பில் ரஷ்ய ராணுவத்தினருடன் இணைந்து வாக்னர் குழுவினர் என்ற பெயரில் ஆயுதக்குழு ஒன்று உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வந்தது. இந்தக் குழு ரஷ்ய அதிபர் புதினின் நண்பர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்பவர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த போரில் ஈடுபட்ட போது ரஷ்ய ராணுவம் தங்களுடைய வீரர்களை கொன்றதாக குற்றம் சாட்டி ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியை வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் அறிவித்தார்.

 

அதன் பின் ரஷ்ய அதிபர் புதின், கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை தேசத்துரோகி எனவும் ஆயுதக் குழுவினரை கண்டதும் சுட வேண்டும் எனவும் அந்த நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டார். இதனால், ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மேலும், வாக்னர் குழு ரஷ்யாவை கைப்பற்ற 200 கி.மீ. தொலைவில் உள்ள மாஸ்கோ தலைநகரை நோக்கி படையெடுத்தனர். மாஸ்கோவை நோக்கி வாக்னர் ஆயுதக்குழு முன்னேறுவதைத் தடுக்க ரஷ்ய ராணுவம் சார்பில் பாலங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்கெஸ்கோ, வாக்னர் ஆயுதக்குழுவின் தலைவர் பிரிகோஜின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தார்.

 

இந்த நிலையில், யெவ்ஜெனி ப்ரிகோஜின் அண்டை நாடான பெலாரசுக்கு சென்று தலைமறைவாகி விட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த நாட்டிற்கு சென்றதை யெவ்ஜெனி ப்ரிகோஜினோ, பெலாரசு அதிகாரிகளோ யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த விவகாரம் பெரிய விவாதப் பொருளாக மாறிய பிறகு சுயேச்சையான பெலாரஸ் ராணுவ கண்காணிப்பு பெலாரஸ்கி ஹாஜூன் என்ற அமைப்பு, யெவ்ஜெனி ப்ரிகோஜின் தனி ஜெட் விமானம் மூலம் பெலாரஸ் தலைநகரமான மின்ஸ்க் என்ற இடத்திற்கு நேற்று காலை வந்திறங்கியதாக தெரிவித்தனர்.

 

இந்த நிலையில், ப்ரிகோஜின் நேற்று முன்தினம் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில், கிளர்ச்சியில் ஈடுபட்ட தனது செயல் நியாயமான செயல் என்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக புரட்சி செய்ய முடியவில்லை என்றும் கூறினார். அந்த ஆடியோ வெளிவந்து பரபரப்பான சூழ்நிலையில் அன்று இரவு ரஷ்ய அதிபர் புதின் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பேசினார்.

 

அதில் அவர், வாக்னர் குழுவையோ, ப்ரிகோஜின் பெயரையோ குறிப்பிடாமல், “ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் உக்ரைனுக்கு கைப்பாவையாக செயல்பட்டனர். அதே நேரத்தில் எந்தவித ரத்த சேதமும் ஏற்படாமல் கிளர்ச்சி செய்த தனியார் படை வீரர்களுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார். இந்நிலையில் தனியார் படையின் கிளர்ச்சி குறித்த விசாரணையை ரத்து செய்வதாக அந்த நாட்டின் அதிகாரிகள் அறிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.