Published on 20/03/2020 | Edited on 20/03/2020
உலகளவில் கரோனாவுக்கு பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.
உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,035 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,44,979 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சீனாவை விட இத்தாலியில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இத்தாலி 3,405, சீனா 3,245, ஈரான் 1,284, ஸ்பெயினில் 831 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவுக்கு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.