Skip to main content

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை... கரோனா வைரஸ் பரவல் காரணமாக சவுதி அரசு நடவடிக்கை...

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

சீனாவின் வூஹான் நகரிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை வழங்கப்படுவதாகச் சவுதி அறிவித்துள்ளது.

 

saudi announces holidays for educational institution

 

 

சீனாவிலிருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் இன்று உலகின் பெரும்பான்மை நாடுகளை மிரட்டி வருகிறது. உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட சூழலில், சுமார் 3,500 பேர் இதன் காரணமாகப் பலியாகியுள்ளனர். வைரஸ் பாதிப்பின் தீவிரம் உலகம் முழுவதும் அதிகரித்திருக்கும் சூழலில், பல்வேறு நாடுகளில் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தனது நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று முதல் காலவரையற்ற விடுமுறையை அளித்துள்ளது சவுதி அரசு. அரசின் அறிவிப்பின்படி, அனைத்து விதமான அரசு, தனியார்ப் பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்குக் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்