Skip to main content

'தேவையுள்ள நாடுகளுக்குக் கொடுங்கள்' - 30 லட்சம் கரோனா தடுப்பூசிகளை ஏற்க மறுத்த வடகொரியா!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

north korea

 

உலகை அச்சுறுத்தி வரும் கரோனாவிற்கெதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பணக்கார நாடுகளைத் தவிர்த்து, மற்ற நாடுகளில் தடுப்பூசித் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து ஏழைநாடுகளுக்குத் தடுப்பூசியை இலவசமாக வழங்கும் வகையில் யுனிசெஃப்பின் கோவேக்ஸ் என்ற திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.

 

இந்தநிலையில் கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் சீனா வழங்க முன்வந்த 30 லட்சம் தடுப்பூசிகளை, வடகொரியா ஏற்க மறுத்துள்ளது. தடுப்பூசிகளுக்கான தேவை அதிகமுள்ள நாடுகளுக்கு அந்த தடுப்பூசிகளை தருமாறு வடகொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து தங்கள் நாட்டில் கரோனா பாதிப்பு இல்லை எனக் கூறி வருவது இங்கு கவனிக்கத்தக்கது.

 

வடகொரியா, கடந்த ஜனவரி மதமே தனது எல்லைகளை மூடிவிட்டது. இதனால் சீனாவிலிருந்து உணவு, உரம் மற்றும் எரிபொருள்கள் வராததால் அண்மையில் வடகொரியா கடுமையான உணவுப் பஞ்சத்தில் சிக்கித் தவித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்