Skip to main content

கரோனா உயிருடன் மட்டுமல்ல பெயருடனும் விளையாடுகிறது... இளைஞருக்கு வந்த வினோத பிரச்சனை!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020
ரக

 

 

உலகம் முழுவதும் கரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. நான்கு கோடிக்கும் அதிகமானவர்கள் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

 

அமைச்சர்களில் தொடங்கி அதிபர்கள் வரை இந்த கரோனா தொற்று தொடர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் அதற்கான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும் இதுவரை எந்த மருந்தும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கரோனாவால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் என்றால், கரோனா என்று ஒருவருக்கு பெயர் உள்ளதால் அவர் அடையும் சிரமங்களுக்கு அளவில்லாமல் போய் உள்ளது. இங்கிலாந்தின் ஸ்டோக் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஒருவருடைய பெயர் ஜிம்மி கரோனா. தன்னுடைய பெயரை கேட்பவர்களிடம் இந்த பெயரை கூறினால், தான் கிண்டல் செய்வதாக கூறி அதனை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். இதனால் அவர்களை நம்ப வைக்க தன்னுடைய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கரோனா உயிரோடு விளையாடியதை தாண்டி இப்போது பெயரோடு விளையாடி வருகிறது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்