Skip to main content

தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்கள்! - அதிர்ச்சித் தகவல்

Published on 04/04/2018 | Edited on 04/04/2018

ஈராக்கில் கடத்திக் கொல்லப்பட்ட இந்தியர்கள் தலையில் சுடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரில் கடந்த 2014ஆம் ஆண்டு 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் என்னவாயினர் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையில், இந்திய அரசு அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, இந்தியா கொண்டுவரப்பட்டது. 

 

பஞ்சாப் மாநில அமிர்தசரஸுக்கு கொண்டு வரப்பட்ட 7 பேரின் இறப்புச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அவர்கள் ஏழு பேருமே தலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை. இந்த இறப்புச் சான்றிதழ்கள் கடந்த மார்ச் 28ஆம் தேதி பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரதகத்தால் கொடுக்கப்பட்டவை. ஈராக்கில் கொல்லப்பட்டவர்கள் 2015ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி வீட்டிற்கு கடைசியாக பேசியுள்ளனர். எனவே, அவர்கள் 15 முதல் 20ஆம் தேதிக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து -100 பேர் உயிரிழப்பு

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

fire at wedding ceremony

 

திருமண நிகழ்ச்சி ஒன்றில் திடீரென திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் ஈராக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் தடபுடலாக திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நூறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

Next Story

புதுவிதமான காய்ச்சல் பரவல்... மூக்கிலிருந்து ரத்தம் வந்து பலர் உயிரிழப்பு!

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

பரக

ஈராக் நாட்டில் மூக்கிலிருந்து ரத்தம் வடியச் செய்யும் புதிய காய்ச்சலுக்கு பலர் உயிரிழப்பது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈராக் நாட்டில் கடந்த சில வாரங்களாக இந்த காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பே இந்த காய்ச்சல் அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,தற்போதைய காய்ச்சல் பரவலில் இதுவரை பாதிக்கப்பட்ட 111 பேரில் 19 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு வகையான உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் கால்நடைகளை வெட்டும் போது அதனால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு இக்காய்ச்சல் ஏற்படுவதாக முதல் கட்டமாகக் கண்டறிந்துள்ளார்கள். இந்த காய்ச்சலை கிரிமியன் காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்று கூட சிலர் அழைக்கிறார்கள். மூக்கில் ரத்தம் வருவதே இந்த காய்ச்சலின் முதல் அறிகுறி. இந்த நோய் பாதிக்கப்படும் ஐந்தில் ஒருவர் பலியாக அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, இந்நோய்க்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை என்பதும் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.