Published on 23/07/2019 | Edited on 23/07/2019
பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
![boris johnson elected as prime minister of britain](http://image.nakkheeran.in/cdn/farfuture/Hs7n_R-vQrzRT2NUPzLioycWyekIi6SDwjtYQcX7-yw/1563885189/sites/default/files/inline-images/boriss.jpg)
அதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் பிரிட்டன் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்நிலையில் கான்செர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக இருந்த தெரசா மே விரைவில் பதவி விலகுவார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.