Skip to main content

இந்தியாவில் 1 ஜி.பி. டேட்டா ரூ.18 மட்டுமே...! ஜியோ எஃபெக்ட்...?

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

குறைந்த விலையில் அதிக மொபைல் டேட்டா கொடுக்கும் நாடுகளில் இந்தியா, உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 1 ஜி.பி. டேட்டாவிற்கு மக்கள் ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 18 மட்டுமே செலவிடுகின்றனர். அதே உலக அளவில் 1 ஜி.பி. டேட்டாவிற்கு மக்கள் சராசரியாக ரூ. 600 செலவிடுகின்றனர். 

 

data

 

லண்டனைச் சேர்ந்த Cable.co.uk. எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 28-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், 230 நாடுகளில் இருந்து 6,313 மொபைல் டேட்டா பிளான்களை அந்நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. அதில் இந்தியாதான் குறைந்த விலையில் அதிக டேட்டா தரும் நாடாக முதலிடத்தில் இருக்கிறது. 
 

இந்தியாவில் 57 டேட்டா பிளான்கள் 1 ஜி.பி. டேட்டாவை ஒரு நாளுக்கு குறைந்தது ரூ. 1.41-க்கும் அதிகப்பட்சம் ரூ. 98.83-க்கும் தருவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் இந்தியா (ரூ.18), கிர்கிஸ்தான் (ரூ.19.5), கஜகஸ்தான் (34.57), உக்ரைன் (ரூ.35.98) மற்றும் ரூவாண்டா (39.51) என இருக்கிறது. 
 

இதுவே பிரிட்டனில் 1 ஜி.பி. டேட்டா ரூ. 469.88-க்கும், அமெரிக்காவில் 1 ஜி.பி. டேட்டா ரூ. 872.73-க்கும் கிடைக்கிறது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகிலே அதிக விலையில் டேட்டா பெறும் நாட்டுகளில் ஜிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது. அங்கு 1 ஜி.பி. டேட்டாவிற்கு மக்கள் சராசரியாக ரூ. 5305.55 செலவிடுகிறார்கள் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  
 

2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ அறிமுகமானதிலிருந்து டேட்டா பயன்பாட்டில் அதிக மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக இலவச 4ஜி டேட்டா என்ற அறிவிப்பு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் விலைகளை மாற்றி அமைக்கும் அளவிற்கு எடுத்து சென்றுள்ளது.
 

2018-ம் ஆண்டில் நவம்பர் மாதம் இறுதி முதல் டிசம்பர் மாதம் இறுதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ புதிதாக 85.6 இலட்சம் பேரை தன் சந்தாதாரர்களாக சேர்த்துள்ளது என்று  மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், 20-2-19 அன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 11 மொழிகளில் ஒருநாள் கிரிக்கெட்;  ஜியோ சினிமா இலவச ஒளிபரப்பு!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 ODI cricket in 11 languages; Jio Cinema Free Streaming

 

உள்நாட்டுப் போட்டிகளை, பிசிசிஐ இன்டர்நேஷனலிடமிருந்து பிரத்யேகமாக ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் திட்டம் குறித்து வயாகாம் 18 இன்று அறிவித்துள்ளது.

 

முதலாவது சர்வதேசத் தொடரை ஜியோ சினிமாவில் 11 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது ஜியோ சினிமா. டி.வி.யிலும், செல்போன் செயலி மூலமாகவும் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த கிரிக்கெட் தொடர் கலர்ஸ் தமிழ் (தமிழ்), கலர்ஸ் பங்களா சினிமா (பெங்காலி), கலர்ஸ் கன்னடா சினிமா (கன்னடா), கலர்ஸ் சினிபிளக்ஸ்  சூப்பர்ஹிட்ஸ் (ஹிந்தி), ஸ்போர்ட்ஸ்-18-1 ஹெச்டி, ஸ்போர்ட்ஸ் 18-1 ஹெச்டி (ஆங்கிலம்) ஆகிய 8 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

 

50 ஓவர் உலகக் கோப்பை விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் கிரிக்கெட் நிபுணர்களின் சிறப்பான கிரிக்கெட் வர்ணனையும் உண்டு. டாடா ஐபிஎல் போட்டி - 2023 நடைபெற்றபோது அனைத்து சாதனைகளையும் உடைத்து, முன்னோடியில்லாத அளவிலான ஈடுபாடு, பார்வையாளர்கள் மற்றும் ஒத்திசைவை நிறுவிய ஜியோ சினிமா தற்போது பார்வையாளர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை இதுவரை கண்டிராத ஜியோ சினிமா டி.வி. வழியாக இலவசமாக வழங்கவுள்ளது வயாகாம்18. ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 50 ஓவர்கள் ஆட்டத்தை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க முடியும்.

 

இதுகுறித்து வயாகாம்18 - ஸ்போர்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அனில் ஜெயராஜ் கூறும்போது, “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் பார்வையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் புதிய தாயகத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும். மேலும் பொறுப்புணர்வுடன், விளையாட்டை ரசிக்கும் விதத்தில் முன்னோடியான மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம். இதுவரை பார்த்திராத வழிகளில் ரசிகர்கள் மிகவும் விரும்புவதை வழங்குவதே எங்கள் தொடர்ச்சியான முயற்சியாகும். மேலும் டிஜிட்டல் முறையில் தொடர்ந்து லீனியர்/ ஆஃப்லைன் டிவி நிகழ்ச்சிகளை வழங்குவோம். பிசிசிஐ நடத்தும் தொடர்களை இணையற்ற முறையில் வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

 

ஜியோ சினிமா செயலியை (ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட்) செல்போன்களில் பதிவிறக்குவதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியும். மேலும், சமீபத்திய புதுப்பிப்பு செய்திகள், செய்திகள், விளையாட்டு ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் சமூக வலைத்தளங்களில் Sports18 -ஐ பின்தொடரலாம். மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் வலைத்தளங்களில் Jio Cinema செயலியைப் பின்தொடரலாம்.

 

போட்டி அட்டவணை


செப்டம்பர் 22, முதலாவது ஒருநாள் போட்டி, பகல் 12.30, பிசிஏ ஸ்டேடியம், மொஹாலி.
செப்டம்பர் 24, 2வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, ஹோல்கார் ஸ்டேடியம், இந்தூர்.
செப்டம்பர் 27, 3வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, எஸ்சிஏ ஸ்டேடியம், ராஜ்கோட்.

 


 

Next Story

நாட்டை அதிரவைத்த 70 கோடி பேரின் தகவல் திருட்டு; முக்கிய நபர் கைது! 

Published on 02/04/2023 | Edited on 02/04/2023

 

Data theft of 70 crores shook the country; Key person arrested!

 

24 மாநிலங்களைச் சேர்ந்த 66.9 கோடி பேரின் தனிப்பட்ட, ரகசிய தகவல்களை திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

இராணுவ அதிகாரிகள், அரசின் முக்கிய அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், பல முக்கிய நிறுவனங்கள் உட்பட நாட்டின் 24 மாநிலங்களைச் சேர்ந்த 66.9 கோடி நபர்களின் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. இதனால், நாடே பரபரப்பானது. இந்தத் தகவல் திருட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கோடி பேரின் தகவல்களும் அடங்கியிருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் திருட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

 

இந்நிலையில், ஐதராபாத் மாநிலத்தில் வினய் பரத்வாஜ் என்பவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நாட்டின் 24 மாநிலங்களில் இந்தத் தகவல் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக அவர் நான்கு பெரும் நகரங்களில் பல ஊழியர்களை பணி அமர்த்தியுள்ளார். இந்தக் கும்பல், டி.மார்ட், பான் கார்டு, அமேசான், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், பேடிஎம், போன்பே, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்தும் ராணுவ அதிகாரிகள், முக்கிய அரசு அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் ஆகியவர்களின் தகவல்களை திருடியுள்ளனர். இப்படி 70 கோடி நபர்களின் தகவல்களை திருடி 104 பிரிவுகளாக விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்டுள்ள வினய் பரத்வாஜ் என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.