Published on 03/02/2022 | Edited on 03/02/2022
![women incident chennai police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/mO3FSocdQpvEjFw3LP5jKzi1SYOoNxQz2dww8hvAm5Q/1643887595/sites/default/files/inline-images/49_19.jpg)
சென்னையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் அளித்த புகாரில், கடந்த ஜனவரி 30- ஆம் தேதி அன்று பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், புகார் அளித்த பெண் குறிப்பிட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், திருவொற்றியூர் காவல் நிலையத்தின் காவலர் வனராஜா பாலியல் சீண்டலில் ஈடுபட்டதைக் கண்டறிந்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.