Skip to main content

அட்டிகா அடகுகடை அதிபர் தலைமறைவு ! போலீசார் தீவிர தேடுதல்!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
akathi

இலங்கை அகதி

தொலைக்காட்சிகளில் அட்டிகா அடகு நகைக்கடை தொடர்பான விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த விளம்பரத்தில் குறிப்பாக அன்றைய மார்கெட் விலைக்கே அடகு வைக்கும் நகைகளுக்கு பணம் கொடுப்போம் என்கிற ஆசையை தூண்டும் விதமாக விளம்பரங்களை பார்த்து திருடிய நகைகளை அட்டிகா கடைகளில் கொடுத்து பணமாக்கியதால் தற்போது அந்த நகைக்கடை அதிபர் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது. 

 

நக்கீரன் இணையத்தில் கடந்த 20.07.2018 100 பவுன் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி! திருட்டு நகைகளை வாங்கிய பிரபல அடகுகடைகாரர் தலைமறைவு! என்கிற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம்.  இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நாமக்கலை சேர்ந்த அட்டிகா  நகைக்கடை அதிபர் மீது வழக்கு பதிவு செய்தும் அவர்களின் தமிழக கிளை பொறுப்பாளர்கள் இரண்டு பேரை கைது செய்திருக்கிறார்கள் திருவரம்பூர் போலிசார். 

 

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி அடுத்த வாழவந்தான்கோட்டையில் இலங்கை அகதிகள் முகமாமை சேர்ந்தவர் தேவகுமாரி. இவர் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு வட்டி தொழில் செய்து வருகிறார்.   இவர், கடந்த 4-ந் தேதி அப்பகுதியில் இரவில் நடந்து சென்றபோது டூவிலரில் வந்த 3 பேர், தேவகுமாரி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

அப்போது முகாமை சேர்ந்த பொதுமக்கள், தேவகுமாரியிடம் நகைகளை பறித்த சிவகுரு, விக்னேஷ் வரன் ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து துவாக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த ராஜன் என்கிற கெட்டியான்பாண்டி மட்டும் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி சென்றார். திருச்சி என்.ஐ.டி. அருகே மறைந்திருந்த அவரை துவாக்குடி போலீசார் பிடித்தனர்.

அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 
திருச்சி மற்றும் நாமக்கல்லில் 100 பவுனுக்கும் மேல் நகைகளை கொள்ளையடித்ததும், அந்த நகைகளை மனைவியிடம் கொடுத்து அனுப்பி நாமக்கல்லில் உள்ள அட்டிகா என்ற நகைக்கடையில் நகைகளை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கெட்டியான்பாண்டி மற்றும் அவருடைய மனைவி அனு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருடிய நகைகளை அட்டிகா அடகு கடையில் வைத்து பணம் வாங்கிய ரசீதுகளை கைப்பற்றி நகைகடையில் நகைளை மீட்பதற்காக சென்ற போது அட்டிகா நகைக்கடையில் பணியாளர்கள் நகைகளை கொடுக்க முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தனிப்படை இன்ஸ்பெக்டர் மதன் திருட்டு நகைகளை வாங்கிய உங்களை விசாரிக்க வேண்டும் என்று நகைக்கடை மேலாளரும், நகை மதிப்பீட்டாளருமான தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த முருகேசன் சேல்ஸ் பொறுப்பாளர் சேலம் மாவட்டம் மேட்டூர் செட்டிகாட்டுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரையும் விசாரணைக்கு அழைத்து வந்து திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக நகைக்கடை உரிமையாளர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாபு மற்றும் தமிழக பிரதிநிதி ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறோம் என்றார் தனிப்படை இன்ஸ்பெக்டர் மதன். இதற்கு இடையில் இன்ஸ்பெக்டர் மதன் மீது நடைக்கடை மீது அவதூறு பரப்பியதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.