Skip to main content

எம்.ஜி.ஆர். செய்ததைத்தான் நான் செய்கிறேன், இதை யாரும் கேட்கக்கூடாது... -கமல் கோபம்

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி, அதற்கு பெயர் அறிவித்து, அதிகாரப்பூர்வ கொடியை அறிமுகம் செய்ததில் இருந்து, தெருமுனைக் கூட்டம், கிராமப்பஞ்சாயத்து சபைகள் என்று பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு தமிழகத்தின் ஆளும் கட்சி, எதிர் கட்சி, மத்திய ஆளும் கட்சி என அனைவரையும் விமர்சனம் செய்து வருகிறார். அதேசமயம் அவர் படங்களில் நடிப்பதில்தான் ஆர்வம் காட்டிவருகிறார். அவர் ஒரு பகுதி நேர அரசியல்வாதி என்று பாஜக-வும் அதிமுக-வும் விமர்சனம் செய்து வருகின்றது. அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் சேலத்தில் நடந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆளும் கட்சியினர் ரிசார்ட்டில் ரெஸ்ட் எடுப்பதாகவும், அந்த நேரத்தில்தான் மக்களுடன் சேர்ந்து கிராமப்பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்று ஒரு அரசியல்வாதியாக தம் பணியை செய்துள்ளதாகவும் பேசியுள்ளார்.

 

kk

 

இன்னமும் ஆளும் கட்சியின் நிலைமையையும், ஊழலையும் திரும்பித் திரும்பி பேசி புலம்பிக்கொண்டிருக்க நேரம் இதுவல்ல. நாம் நாளையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம். பலமுறை வெவ்வேறு ஆட்களை வெற்றிபெற வைத்து நீங்கள் தோற்றுக்கொண்டு இருக்குறீர்கள். ஆனால், இம்முறை நீங்கள் வெற்றிபெற வேண்டும். உங்களை வெற்றிபெற வைத்த தலைவர்கள் எல்லாம் இன்று இல்லை. நான் இங்கு பார்ப்பது எல்லாம் ரசிகர்களின் கூட்டத்தையோ, தொண்டர்களின் கூட்டத்தையோ இல்லை நாளையத் தலைவர்களின் கூட்டத்தை. தமிழகத்தின் தலைமையை நீங்கள் ஏற்கவேண்டும் அதற்கு சேவை செய்ய சேவகர்களை நீங்கள்தான் நியமிக்க வேண்டும். அதில் ஒருவனாய் பெருமையாக நான் முன் நிற்பேன். எனது இருபது வயது முதல் எனக்கு பலமுறை சொல்லப்பட்ட விஷயம் 'இப்படி வாய்க்காது உனக்கு வாய்த்து இருக்கிறது அதை பயன்படுத்திக்கொள்' என்பதே. அவற்றை எல்லாம் மதித்து எனக்கு கிடைத்த வாய்ப்புகளாக நினைத்து பயன்படுத்தி இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன். ஆனால், உங்கள் முன் நிற்கும் இந்த இடத்தை நான் வாய்ப்பாக கருதவில்லை, இது என் கடமையாக நினைக்கிறன். உங்களுக்கு எல்லாம் பதில் சொல்வதுமட்டும் என் கடமை அல்ல வேலை செய்வதும் என் கடமையே அதை நிச்சயம் செய்வேன். உங்கள் பணியில் வாழ்வதுதான் இனி வாழ்க்கை. அப்போ சினிமாவில் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டால் நடிப்பேன் என்றுதான் சொல்லுவேன். இப்படி சொன்னால் நீங்கள் பகுதிநேர அரசியல்வாதியா முழுநேர அரசியல்வாதி இல்லையா என்பார்கள்.

 

 

 

அப்படி கேட்பவர்களை எல்லாம் பார்த்து நான் திருப்பி கேட்கிறேன். நாங்கள் எல்லாம் கிராமப்பஞ்சாயத்தில் மணி கணக்கில் அமர்ந்து பேசுகிறோம். ஆனால், அந்த இடத்திற்கு நியாயமாக போகவேண்டியவர்கள் எங்கோ ரிசார்ட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் யார் முழுநேர அரசியல்வாதிகள். எம்.ஜி.ஆர் அரசியலில் இருக்கும்போதே படங்களையும் நடித்துவந்தார். எம்.எல்.ஏ எம்.ஜி.ஆர் என்று படங்களின் தலைப்பில் பார்த்ததில்லையா. அவரென்ன பகுதிநேர அரசியல்வாதியா. அவர் அவரின் வாழ்வாதாரத்துக்காக படங்களில் நடித்தார். அதனால்தான் அவரால் தைரியமாக கணக்கு கேட்கமுடிந்தது. தன்னை முழுநேர அரசியல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டு, ஒரு ரூபாய் கொடுத்தால் போதும் உங்களுக்கு வேலை செயகிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம் கஜானாவை காலி செய்ததைத்தவிர வேறு என்ன செய்தார்கள்.

 

 

 

ஆங்கிலத்தில் விஷன் என்று ஒரு வார்த்தை உள்ளது. விஷன் என்பது லட்சியம் என்று பொருள் அதனை வைத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறேன், உங்களுக்கும் அது தென்படவேண்டும். அப்படி தென்பட்டால் நாளை நமதே. பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டதே என்று கதறி பிரயோஜனம் இல்லை. நாம் அழுத்தி கேள்விகளை கேட்கவேண்டும். அனைவருக்கும் ஒரு விலை உண்டு என்பதுதான் வியாபாரியின் சிந்தனை. என்னையும் விலைபேசி இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் விலைபேசிவிட முடியாது. என்னை விலை பேசியவர்கள் எல்லாம் தோற்றுப்போனார்கள். நிறையபேர் வாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், வாங்க முடியாது என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டும். என்னை விலைபேசிய கதை பலருக்கு நினைவிருக்கலாம், பலர் அதை மறந்து இருக்கலாம். ஆனால், நான் விலை போகவில்லை. 'நீங்க இன்னும் சொத்து சேர்த்து இருக்கலாமே, அந்த விஷயத்தில் மட்டும்தான் நீங்கள் கோட்டைவிட்டுவிட்டிர்கள்' என்று சொல்லியவர்களை எல்லாம் எண்ணி எள்ளி நகையாடுவதைவிட வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களுக்கு தெரியாது என் சொத்து இங்கு (மக்கள்) இருக்கிறது என்று. என்னை அவர்களால் ஏழையாக ஆக்கவே முடியாது. உங்கள் அன்பு இருக்கும்வரை நான் நிரந்தர பணக்காரன். இனி நீங்களாக என்னை வழியனுப்பும்வரை நான் உங்களை நோக்கி வந்துகொண்டே இருப்பேன். நாளை நமதாக வேண்டும் என்றால், நாம் அனைவரும் ஒன்றுகூடி ஒரு நோக்குடன் செயல்பட வேண்டும். அப்படி செய்தால் நாளை நமதே. 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.