Skip to main content

அரசு தரப்பு வழக்கறிஞர்  சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் நீதி கிடைக்குமா?  சிறுமி பலாத்கார வழக்கில் மாதர் சங்கம் கேள்வி

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
g


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர்  பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் இளந்திரை என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவபாலு (வயது-22, த/பெ அய்யனார்) என்பவர் பெரம்பலூர் மாவட்டம் மணகுப்பம் கிராமத்தில் வசிக்கும் 16-வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 16.11.17 அன்று கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வழக்கு பாக்சோ சட்டப் பிரிவின் கீழ் பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 

10.10.18 அன்று வழக்கு விசாரணைக்கு வரும் சூழலில் 9.10.2018 அன்று இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரான ஜி.சித்ராதேவி  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சாட்சியான சிறுமியிடமும் அவரது தாயாரிடமும் சிவபாலுவை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தங்களுக்கு எதுவும் நடைபெறவில்லை என்று கூற வேண்டும் என வற்புறுத்தி உள்ளார். 

 

பாக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும். இவ்வழக்கில் முக்கிய சாட்சியான சிறுமையை பாதுகாப்பது மிக முக்கியமான கடமை. ஆனால் சாட்சிகளை கலைத்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அரசு தரப்பு வழக்கறிஞர் சித்ராதேவி நடந்து கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். 


    பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வழக்குகளை துரிதமாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும். மேலும் சாட்சிகளை மிரட்டுவது, கடத்துவது, கொலை செய்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் பல முக்கிய வழக்குகளில் நடைபெற்று வருவதை பார்க்க முடியும்.

 

 சாட்சிகளை பாதுகாப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவது மிகமிக அவசியமான ஒன்றாகும். ஆனால் தமிழகத்தில் சாட்சிகளை பாதுகாப்பதற்கான போதுமான ஏற்பாடுகள் இதுவரை இல்லை. சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் பல நாடுகளில் உள்ளது. இதுவரை இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. தமிழகத்தில் தொடர்ந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. ஆசாராம் பாபு ஆசிரமத்தில் நடந்த குழந்தைகள் பலாத்கார வழக்கில் சாட்சிகள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட அனைவரும் காவல்துறை, நீதித்துறை நம்பியே இருக்கிறார்கள். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சாட்சிகளை கலைத்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார். 


    எனவே பெரம்பலூர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக இருக்கும் சித்ராதேவி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு ஒரு பொருத்தமான, திறமையான, வழக்கறிஞரை நியமித்து நீதி கிடைக்க ஆவன செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். வழக்கறிஞர்கள், காவல்துறையை சார்ந்தவர்களுக்கும், குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் போதுமான பயிற்சி அளித்து குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறோம்.


 ’’

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

உ.பி.யில் பரபரப்பு; ஆஸ்கர் விருது பெற்ற சிறுமியின் வீடு இடிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Oscar winner Pinki house demolished

 

உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி பிங்கியின் வீடு இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில், ராம்பூர் தாபி கிராமத்தில் வசித்து வந்தவர் சிறுமி பிங்கி குமாரி சோன்கர். இவருக்கு உதட்டில் பிளவு(Cleft lip) இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிறுமிக்கு சரிசெய்து கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்மைல் பிங்கி’ என்ற குறும்படம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்(குறும்) படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை பிங்கியின் கிராமத்தின் பக்கம் திரும்பியது. 

 

அந்த சமயத்தில் மிர்சாபூர் மாவட்ட நிர்வாக சார்பில் வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டு பிங்கியின் குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி பிங்கியின் வீட்டோடு சேர்த்து அந்த கிராமத்தில் உள்ள 30 வீடுகளையும் காலி செய்யுமாறு அறிக்கை வெளியிட்டனர். 

 

இது குறித்து பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கர்  கூறுகையில், “நாங்கள் வீடு கட்டும் பொழுது இந்த நிலம் வனத்துறையினருக்கு சொந்தமானது எனக் கூறவில்லை. அந்த கிராமத்தில் 70 வது வருடங்களாக எந்த தடையும் இன்றி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்” என்றார். அவரது வழக்கறிஞர் பேசுகையில், “வனத்துறையினர் தான் பிங்கியின் வீட்டிற்கு அடிக்கல்லை நாட்டினர். ஆனால் இன்று அவர்களே இதனை ஆக்கிரமிப்பு என சொல்கின்றனர்” என்றார். “இந்த விவகாரத்தில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் நியாயமான முறையில் தீர்க்கப்படும்” என மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரியங்கா நிரஞ்சன்  தெரிவித்திருக்கிறார்.