Skip to main content

கார் டிக்கியில் இறந்த நிலையில் சடலம்; கடன் கொடுத்தவருக்கு நேர்ந்த கொடூரம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

 'Dead body in car trunk' brutality of moneylender

 

தூத்துக்குடியில் கொடுத்த கடனை திரும்பக் கேட்டதால் கடன் வாங்கியவர் கூலிப்படையை வைத்து கடன் கொடுத்த நபரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பல்லாக்குளம் பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் நேற்று இரவு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்தது. அந்த வழியாக வாகனத்தில் சென்ற சிலர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த காரை சோதித்ததில் காரின் டிக்கியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த நாகஜோதி என்பது தெரிய வந்தது. தொழிலதிபரான நாகஜோதியின் மரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

 

போலீசாரின் தொடர் விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. தொழிலதிபர் நாகஜோதி வெளியூர் செல்லும் போதெல்லாம் மைக்கேல் ராஜ் என்பவரை டிரைவராக உடன் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். ஒருமுறை அப்படி காரில் அழைத்து சென்றபோது காரை ஒட்டிய மைக்கேல்ராஜ் அடமானம் வைத்த தன்னுடைய நகைகள் ஏலத்துக்கு வர இருப்பதால் 2 லட்சம் ரூபாய் தருமாறு நாகஜோதியிடம உதவி கேட்டுள்ளார். நாகஜோதியும் உதவி செய்துள்ளார். பின்னர் ஒருநாள் கொடுத்த பணத்தை டிரைவர் மைக்கேல்ராஜிடம் நாகஜோதி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தர முடியாததால் மைக்கேல்ராஜ் நாகஜோதியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

 

விளாத்திகுளத்தில் தனக்கு வேண்டியவர் எனக்கு இரண்டு லட்சம் தருவதாக கூறியிருக்கிறார். அதை வாங்கி உங்களுடைய கடனை அடைத்து விடுகிறேன் என மைக்கேல் தெரிவித்துள்ளார். அதை நம்பிய நாகஜோதி காலை 8:00 மணி அளவில் சாயல்குடியில் இருந்து காரில் புறப்பட்டார் மைக்கேல் ராஜ் காரை ஓட்டினார். சிறிது தூரம் கார் சென்றபோது வழியில் நின்ற கணபதிராஜன், மாரி, கனி ஆகிய 3 பேர் காரில் ஏறினர். இதனால் பதற்றமடைந்த நாகஜோதி யார் இவர்கள் என மைக்கேல்ராஜிடம் கேட்டுள்ளார். ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக இவர்கள் வந்துள்ளார்கள் என மைக்கேல் ராஜ் சமாளித்துள்ளார்.

 

தொடர்ந்து கார் சூரங்குடி அருகே உள்ள குமாரசக்கனாரபுரம் அருகே சென்றபோது நான்கு பேரும் சேர்ந்து நாகஜோதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். நாகஜோதி பணம் கொடுக்க மறுத்ததைத் தொடர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். தொடர்ந்து காரை வைப்பார் பல்லாக்குளம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு செலுத்திய மைக்கேல்ராஜ், நாகஜோதியின் உடலை காரின் டிக்கியில் வைத்துள்ளார். அதன் பின்னர் சரக்கு ஆட்டோவில் சென்று பெட்ரோல், விறகு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து காருக்குள் போட்டு காருக்கு தீ வைத்து விட்டு நான்கு பேரும் தப்பி சென்றனர். முக்கிய கொலையாளியான மைக்கேல்ராஜின் செல்போன் சம்பவ இடத்தில் தவறி விழுந்துள்ளது. சம்பவ இடத்தில் செல்போன் கிடைத்ததால் போலீசார் குற்றவாளிகளை இந்த சம்பவத்தில் எளிதாக கைது செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.