Skip to main content

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை... போதை ஆசாமிகளின் புலம்பல்...

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
tasmac shop open issue



கடந்த 43 நாட்களுக்கு பிறகு கடந்த 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. 43 நாட்கள் ஏங்கிக் கிடந்த மது பிரியர்கள் வேகாத வெயிலிலும் குடை பிடித்துக்கொண்டு பல மணி நேரம் கால் கடுக்க காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.


சாதாரண ஏழை, நடுத்தர மக்களுக்கு வருமானம் இல்லை. நீண்ட நாட்கள் அரசின் தடை உத்தரவால் பட்டினிச் சாவுகள் அதிகரிக்க உள்ளன என பேசப்பட்ட நிலையில், 7ம் தேதி ஒரு நாள் வசூல் மட்டும் 170 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. மதுபானங்களின் விலை உயர்வை பற்றியோ, பணத்தை பற்றியோ மது பிரியர்கள் கவலைப்படவில்லை. மதுபாட்டில் கிடைத்தால் போதும், அதுவே எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று குடித்து ஆடினார்கள் மது பிரியர்கள். ஆனால் இன்றைய நிலையோ, அவர்கள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதை போல ஆகிப்போனது என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள். 

டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் 17ஆம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம் என உத்தரவிட்டது.

 

 


இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்று மேல்முறையீடு செய்துள்ளது. இது ஒரு பக்கம். ஆனால் நீதிமன்ற உத்தரவை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். அதோடு நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

அரசு இனி கடையை மூடாது, வரும் நாட்களில் கூட்டம் குறைந்து விடும் சாவகாசமாக சென்று வாங்கி குடிக்கலாம் என்று எண்ணியிருந்தனர் டாஸ்மாக் பிரியர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் மீண்டும் கடையை மூட சொல்லி உத்தரவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட தகவல்களைகூட தெரிந்துகொள்ளாமல் காலையில் எழுந்ததும் கண்களை துடைத்துக்கொண்டு டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்று வந்து பார்த்துவிட்டு  ஏமாற்றத்துடனும், ஏக்கத்துடனும் திரும்பி சென்றுள்ளனர் தீவிர மது பிரியர்கள். இவர்களுக்கு என்றுதான் தணியுமோ இந்த மது மீதான தாகம். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

பிரிட்டன் முழுவதும் விமான சேவை முடங்கியது!

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Flight services across Britain are suspended

 

பிரிட்டன் முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை முடங்கி உள்ளது.

 

பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அருகில் இருந்த விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்கின. அதே சமயம் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக பிரிட்டன் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.