Published on 31/03/2020 | Edited on 31/03/2020
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று (31/03/2020) மாலை 04.00 மணிக்கு சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. தமிழகத்தில் எடுக்கப்படும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதல்வர் விளக்குவார் என்று தகவல் கூறுகின்றன.
தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.