Skip to main content

நின்றுபோன திருமணம்... ஏழு லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மணமகன் புகார்

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

Stopped marriage ... Groom complains for seven lakh compensation

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது கடம்புலியூர் கிராமம். அங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண் தனது தோழிகளுடன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாட்டு கச்சேரியில் நடனமாடினார். இதனால் கோபமுற்ற மணமகன் மணப்பெண்ணைக் கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு கோபித்துக்கொண்ட மணப்பெண் மணமகனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண்ணின் தந்தை திருமணத்தை நிறுத்தினார். இதனால் கடந்த 19ஆம் தேதி நடைபெற இருந்த திருமணம் திடீரென நின்று போனது. இதனால் மணமகன் வீட்டார் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

 

இந்த நிலையில் திருமணத்திற்கு வருகை தந்திருந்த செஞ்சியைச் சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரை மணமகனாகத் தேர்ந்தெடுத்து உடனடியாகத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மணமகளின் கன்னத்தில் அறைந்த மாப்பிள்ளை, திருமணம் நின்றுபோன கோபத்தில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் திருமண வரவேற்பு விழாவில் நடைபெற்ற பாட்டுக் கச்சேரியின் போது என்னையும் அந்த பெண்ணையும் சேர்ந்து நடனமாடச் சொல்லி வற்புறுத்தினார்கள். அப்போது நடனமாட எனக்கு விருப்பமில்லை என்று கூறி விட்டேன். ஆனால் அந்தப் பெண்ணின் கையை பிடித்து கொண்டு வேறு ஒருவர் நடனம் ஆடினார். இப்படி மற்றவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடலாமா?

 

இது தவறு என்று சுட்டிக் காட்டியதற்காக அந்தப் பெண்ணும் அவரது உறவினர்களும் என்னை அடித்தார்கள். இதனால் திருமணம் நின்று போனது. நானும் எனது குடும்பத்தினரும் அவமானப்படுத்தப்பட்டு, வேதனை அடைந்தோம். திருமண நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை சுமார் 7 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. தற்போது எனது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எனக்கு நஷ்ட ஈடாக ஏழு லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும். மேலும் என்னை ஏமாற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.