Skip to main content

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூடு..! 

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

Sri Lankan navy fires on Tamil Nadu fishermen ..!

 

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், நாகை மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

 

நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த 28ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று (01.08.2021) மாலை கோடியக்கரைக்குத் தென்கிழக்கே இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு அதிவேகமாக வந்த இலங்கை கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்களின் விசைப்படகுகளைக் குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

 

இதனை சற்றும் எதிர்பார்த்திடாத மீனவர்கள், அதிர்ச்சியடைந்து படகுகளில் படுத்துக்கொண்டனர். இலங்கை கடற்படையினரின் இந்தத் துப்பாக்கி தாக்குதலில் படகு பெரும் சேதாரம் ஆகியுள்ளது. அதுமட்டுமின்றி அக்கரைப்பேட்டையச் சேர்ந்த மீனவர் கலைச்செல்வன் என்பவரின் தலை மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவரது உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறி படகிலேயே மயங்கி விழுந்துள்ளார். அதன் பின் கலைச்செல்வனை காப்பாற்ற, மற்ற மீனவர்கள் படகைக் கரை நோக்கி திருப்பினர். ஆனாலும் அந்தப் படகை விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டி வந்துள்ளனர். 

 

தப்பினால் போதும் என வேகமாக கரை சேர்ந்துள்ளனர் மீனவர்கள். ஆனாலும் இலங்கை கடற்படையினரின் ஆத்திரம் குறைந்திடாமல், அந்தப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்களின் பல படகுகளைக் குறிவைத்து மீண்டும் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு தாக்குதலைக் கண்டு நிலைகுலைந்த மீனவர்கள் அனைவரும், தப்பித்தால் போதும் என்கிற நிலையில் அவசர அவசரமாக கரை திரும்பியுள்ளனர்.

 

இந்தநிலையில், குண்டடிபட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர் கலைச்செல்வனை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் மீனவரின் தலையில் உள்ள குண்டு சிராய்ப்பு துகள்களை அகற்றி அவருக்கு சிகிச்சை அளித்துவருகின்றனர்.

 

நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சம் கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.