![salem homeopathy doctor incident court action taken](http://image.nakkheeran.in/cdn/farfuture/WwrSkEx3LK5l7l4wwyW0MeRtj_0I9o3a2otogeGhHiY/1673498572/sites/default/files/inline-images/art-img-villupuram_7.jpg)
மருத்துவரிடம் வழிப்பறி செய்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் ஹோமியோபதி மருத்துவர் ஆவார். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி, இருசக்கர வாகனத்தில் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தாதம்பட்டியைச் சேர்ந்த செல்வம் (வயது 34), ரவிக்குமார் (வயது 29) ஆகியோர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, சேகரிடம் இருந்த 2500 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் வழக்கில் ஜனவரி 10ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஹோமியோபதி மருத்துவரை மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக செல்வம், ரவிக்குமார் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு அளித்தார்.