Skip to main content

ஜிப்மர் முன்னாள் ஊழியர் கழுத்தறுத்துக் கொலை! 

Published on 12/10/2020 | Edited on 12/10/2020

 

pondicherry ariyangkuppam issue

 

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி ராதா, ஏற்கனவே இறந்துவிட்டார். நித்தியானந்தன் என்ற ஒரு மகனும், வேணி, லட்சுமி என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள்கள் இருவரும் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். மகன் அரசு ஊழியராகப் பணியாற்றி, கடலூரில் வசிக்கிறார்.

 

இதனால், சுப்பிரமணியன் காக்கையன்தோப்பில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இரவு மாடியில் உள்ள அறையில் அவர் தூங்குவது வழக்கம். அவருக்கு மருமகன் பழனி தினமும் உணவு எடுத்துச் சென்று தருவார். இந்த நிலையில் நேற்று காலை மருமகன் பழனி உணவு எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, படுக்கையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். 


இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனி, உடனே அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? சுப்பிரமன்னனுக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? அல்லது நகை, மற்றும் பணத்திற்காக, சொத்துகாக இந்தக் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்