Skip to main content

விஷமான முள்ளங்கி சாம்பார்...? உயிரிழப்பை தொடர்ந்து விசாரணையில் சுகாதாரத்துறை!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Poisonous radish sambar ...? Health officials investigate

 

கடலூர் மாவட்டத்தில் வீட்டில் செய்த உணவைச் சாப்பிட்ட தம்பதியினர் உயிரிழந்த நிலையில் அதே உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம்  குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்துள்ள இளங்கியனூர் எனும் கிராமத்தில் சுப்பிரமணியன்-கொளஞ்சிம்மாள் தம்பதி வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்து சாப்பிட்ட நிலையில், சுப்பிரமணியன், கொளஞ்சியம்மாள், பேரன் சரவணன் கிருஷ்ணன், பக்கத்து வீட்டை சேர்ந்த பிரியதர்ஷினி, நித்தீஷ் ஆகியோருக்கு மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. இவர்களில் சுப்பிரமணியன் கொளஞ்சியம்மாள் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மற்ற சிறார்கள் மூரும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினரும், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்