Skip to main content

ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

 


 

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் ஆஜராகினர். 

 

வழக்கு விசாரணையின்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட் கிளையில் ஜூலை 1ஆம் தேதி இந்த வழக்கில் உள்ள தடை ஆணை குறித்த விசாரணை வருகிறது என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கை 08.07.2019க்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் வழக்கு விசாரணையில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. 

-அதிதேஜா
படங்கள்: அண்ணல், ராம்குமார்

 


 

 

 

சார்ந்த செய்திகள்