Skip to main content

மலைவாழ் மக்களுக்கு 4 கி.மீ. நடந்து சென்று மருந்து பெட்டகம் வழங்கிய அமைச்சர்! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Minister Ma.Subramaniyam provided medical kit to villagers near namakkal

 

நாமக்கல் அருகே, போதமலையில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், அமைச்சர் மா.சுப்ரமணியன் 4 கி.மீ., தூரம் நடந்து சென்று, மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள போதமலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் 75 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) நடந்தது. இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நாமக்கல் வந்திருந்தார். அவருடன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மேல்சபை எம்.பி., ராஜேஷ்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் கணேஷ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் அலுவலர்கள், ஆயில்பட்டி வழியாக ஜம்பூத்துமலைக்கு வந்தனர். 


அங்கிருந்து, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதமலைக்கு உட்பட்ட கெடமலை வரை அவர்கள் நடந்தே சென்றனர். அமைச்சர் மா.சுப்ரமணியன், பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். 


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது; “தமிழக முதல்வர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார். மாநிலம் முழுவதும் உள்ள மலைக்கிராமங்கள் மட்டுமின்றி, அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 75 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கடைக்கோடி மனிதனுக்கும் மருத்துவ சிகிச்சை என்பதுதான் இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும். 


ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத இரண்டு மருத்துவர்களை பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் 1021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரம் காலிப்பணியிடங்கள், மருத்துவ தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். 


நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது 9 கோடி ரூபாயில் பிரதான குடிநீர்க் குழாய் பதிக்கும் பணியும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இக்கல்லூரி, 100 மாணவர்கள் சேர்க்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்தவுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுமையாக செயல்படும். 


இந்த மாவட்டத்தில் நாமக்கல் மட்டுமின்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. ராசிபுரம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்காக 23.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.