Skip to main content

அரசியல் பிரவேசம் குறித்த முடிவை விரையில் அறிவிப்பேன்... -நடிகர் ரஜினிகாந்த்

Published on 30/11/2020 | Edited on 30/11/2020
jk

 

 

ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியானது. இந்த அறிவிப்பு வெளிவந்த உடன் "தலைவர் கட்சி தொடங்குவது பற்றி அறிவிக்கத்தான் இந்த கூட்டத்தை அறிவித்துள்ளார்" என்று ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார்கள். இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புக்கள் மத்தியில் இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது. 

 

இதில், அரசியல் தொடர்பாகவும், கட்சி ஆரம்பிக்கலாமா என்பது குறித்தும் அவர்களிடம் ரஜினி கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. ரஜினியிடம் பேசிய நிர்வாகிகள், முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை எவ்வளவு விரையில் முடியுமோ அவ்வளவு விரைவில் அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் தான் எடுக்கும் முடிவுக்கு மாவட்ட செயலாளர்கள் கட்டுப்படுவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்