Skip to main content

டெல்டா மாவட்டங்களை திணறடிக்கும் கனமழை!!

Published on 02/11/2018 | Edited on 02/11/2018

டெல்டா மாவட்டம் முழுவதும் அடை மழைப்பேய்துவருவதால் தாழ்வான விவசாய பகுதிகளிலும்  சாலைகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி பொது மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கிவருகிறது.

 

 Delta Districts

 

காற்றழுத்த தாழ்வு நிலை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரண்டு நாட்களாக  விடிய விடிய கனமழை கொட்டித்தீீர்த்துவருகிறது. 

 

நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளனர்.

 

கடைமடைப்பகுதிகளான நாகை, நாகூர் வேளாங்கண்ணி, உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகள் முழுவதிலும் மழைநீர் தேங்கி போக்குவரத்தை திணறடித்துவருகிறது. 

 

 Delta Districts

 

இதனிடையே நாகையில்  அதிக கடல் சீற்றத்துடன் கூடிய கனமழை பெய்து வருவதால், நாகை, வேதாரண்யம், பழையார், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் ஆங்காங்கே உள்ள துறைமுகம் மற்றும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

 

 Delta Districts

 

சாதரண மழைக்கே வெள்ளக்காடாகிவிடும் திருவாரூரில், இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழை பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழையும் தண்ணீரும் இல்லாமல் விவசாயம் பொய்த்திருந்த நிலையில் இந்த ஆண்டு கிடைத்த தண்ணீரைக்கொண்டு மிகவும் தாமதமாக விவசாய பணிகளை மேற்கொண்டனர், தற்போது இளம் பயிராக இருக்கும் நிலையில், இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் வயல்கள் முழுவதும் முழுகி கடல்போல் காட்சியளிக்கிறது.

 

இன்னும் மழை நீடிக்கும் என்பதால் விவசாயிகளும், பொது மக்களும் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.