Skip to main content

'410 ஆசிரியர்களுக்குப் பணி வழங்குக' - நீதிமன்றம் உத்தரவு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
'Give employment to 410 teachers'- court orders

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டி தேர்வை எதிர்த்து 410 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்த நிலையில் 10 ஆண்டுகளாக 410 ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்திருந்து வருகின்றனர். தகுதித் தேர்வு எழுதி பணி நியமனத்திற்கு காத்திருக்கும் நேரத்தில் 2018 ஆம் ஆண்டு போட்டி தேர்வை அரசு கொண்டு வந்ததால்  பணி நியமனம் இல்லாமல் காத்திருக்கும் ஆசிரியர்கள் 410 தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ள நீதிபதி மகாதேவன் அமர்வுக்கு முன்பு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போட்டித் தேர்வு என்பது 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு அதற்கு முன்னதாகவே மனுதாரர் 410 பேரும் மாநில அரசின் திட்டத்தின் படிதகுதித் தேர்வு எழுதியுள்ளனர். எனவே 410 பேருக்கும் தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்