Skip to main content

சேலம் தென்னை மரங்களுக்கு  50 ஆயிரம், கஜா தென்னை மரங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயா? ஜி.கே.வாசன் கேள்வி

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
va

  

 கீரமங்கலம் பகுதியில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பா.ஜ.க எச்.ராஜா, நாம்தமிழர் கட்சி சீமான், த.மா.கா ஜி.கே.வாசன் ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் பார்வையிட்டனர். 

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்கள் கஜா புயலில் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மினசார வாரியம் மட்டும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் மற்ற துறை சார்ந்த மீட்புக்குழுவினர் கிராமங்களுக்குள் வரவில்லை. அதனால் அந்தந்த கிராம இளைஞர்களே மரங்களை வெட்டி அகற்றி மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பல கிராமங்களில் சாலைப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 


    இந்த நிலையில் கீரமங்கலம் பகுதிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வந்து பாதிக்கப்பட்ட கிராமங்களை பார்வையிட்டு நிவாரணத் தொகைளை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


    
    கீரமங்கலம், செரியலூர், பனங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது.. முழுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் மீட்புகுழு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு அறிவித்த யாரும் கிராமங்களுக்கு செல்லவில்லை என்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரணம் என்பது யானைப் பசிக்கு சோளப் பொறி கொடுப்பது போல உள்ளது. ஒரு தென்னை மரத்தை வளர்க்க எவ்வளவு ஆண்டுகள், எவ்வளவு செலவு அதைப்பற்றி கொஞ்சம் கூட நினைவில் கொள்ளாமல் குறைவான தொகையை வழங்க உள்ளது வேதனையானது. 8 வழிச்சாலையில் பாதிக்கப்படும் ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ள அரசு,  புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்துக்கு ரூ. ஆயிரத்தி நூறு வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது? அதனால் தமிழக அரசு உடனடியான கணக்கெடுப்புகளை முறையாக செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அதிகமான இழப்பீடு வழங்க வேண்டும்.


    மத்திய அரசு உள்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.

Next Story

த.மா.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜி.கே.வாசன் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், நேற்று (31-03-24) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் குறித்த ஒளிநாடாவை வெளியிட்டு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசினார்.