Skip to main content

'இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்'-வைரமுத்து டிவிட்! 

Published on 15/10/2020 | Edited on 15/10/2020
vairamuthu tweet

 

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கி டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம் என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இருந்த முரளிதரனை பெருமைப்படுத்தும் வேடத்தில் நடிப்பதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்