Skip to main content

கரோனா அச்சத்தால் மந்தமான மாட்டுச் சந்தை!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021
Famous cattle trade slowed down by second wave of Corona

 

ஈரோட்டில் பிரபலமான கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இங்கு நடைபெறுகிற கறவை மாட்டுச் சந்தை மிகவும் புகழ்பெற்றது. இதற்காகவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாட்டு வியாபாரிகள் அதிகளவில் வந்து இங்கு மாடுகளை வாங்கிச் செல்வார்கள்.

 

குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒவ்வொரு வாரமும் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இரண்டாவது அலையாக கரோனா தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியா முழுக்க ஏற்படும் தினசரி பாதிப்புகளில் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 70 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த இரு மாநிலங்களிலும் கரோனா வேகமாகப் பரவி வருவதால், இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில சுகாதாரத் துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த இரண்டு மாநிலத்துக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதன் காரணமாக 25 ஆம் தேதி வியாழக்கிழமை ஈரோடு கருங்கல்பாளையத்தில் கூடிய மாட்டுச் சந்தைக்கு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில வியாபாரிகள் ஒருவர்கூட வரவில்லை.

 

பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் வரமுடியவில்லை. இதன் காரணமாக ஈரோடு மாட்டுச்சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது. இந்த மாட்டுச் சந்தைக்கு 400 பசுக்கள், 200 எருமை மாடுகள், 100 வளர்ப்புக் கன்றுகள் விற்பனைக்கு வந்தன. அதில் பசு மாடுகள் ரூபாய் 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரைக்கும், எருமை மாடுகள் ரூபாய். 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைக்கும், வளர்ப்புக் கன்றுகள் ரூபாய் 10,000 முதல் 15,000 வரையும் விற்பனையானது. சந்தையில், 80 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனையானதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கர்நாடக, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். மாடுகள் எண்ணிக்கை அதிகரித்தபோதும் வியாபாரிகள் அதிகளவில் வராததால் வியாபாரம் மந்தமாக நடந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.