Skip to main content

க.அன்பழகன் மறைவுக்கு ஈரோடு பத்திரிகையாளர்கள் அஞ்சலி...

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் மறைவுக்கு தமிழகம் முழுக்க அனைத்து கட்சி சார்பிலும் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் ஈரோட்டில், ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

erode press people pays tribute to anbazhagan

 

 

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்க தலைவர் ரமேஷ் தலைமை ஏற்க, மாவட்ட செயலாளர் ஜீவாதங்கவேல் முன்னிலை வகித்து, பேராசிரியர் அன்பழகன் தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் ஓய்வறியாமல் ஆற்றிய தொண்டினை எடுத்துரைத்தனர். அதேபோல் விடுதலை செய்தியாளர் சண்முகம், தினகரன் செய்தியாளர் மகேந்திரன், தினமணி புகைப்படக்கலைஞர் ரவிச்சந்திரன் உட்பட பலரும் க.அன்பழகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் ஈரோடு பத்திரிகையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்