Skip to main content

இ.பி.எஸ். வழக்கை திரும்பப் பெற்றேனா? - ஆர்.எஸ். பாரதி பதிலடி

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

 Did EPS case withdraw? RS Bharti reminded
கோப்புப் படம் 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது, முதலமைச்சர் காணொளி வாயிலாக வெளியிட்ட அறிக்கை உள்ளிட்டவை குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஒரு காணொளி வாயிலாகப் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய்க்கு இட்லி, தோசை சாப்பிட்ட கூட்டம் எடப்பாடி கூட்டம்; இது ஆறுமுகசாமி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு தலைவர் மருத்துவமனையில் இருக்கும் போது ஒன்றரை கோடிக்கு இட்லி, தோசை சாப்பிடும் கூட்டம் திமுக கிடையாது. தொண்டனுக்கு ஒரு இழுக்கு ஏற்பட்டாலும் பதறிச் சென்று பார்ப்பவர் எங்கள் தலைவர். எடப்பாடி ஏதோ அவர் மீது போடப்பட்ட வழக்கை நான் வாபஸ் பெற்றேன் என்று வடிகட்டிய பொய்யை சொல்லியிருக்கிறார். அவருக்கு வரலாறும், சட்டமும் தெரியாது. வரலாற்றை நான் சொல்ல விரும்புகிறேன். 

 

“இவர் எப்படி முதல்வராக இருந்தார்?” - ஆர்.எஸ். பாரதி 
 

 

அவரது தலைவர் ஜெயலலிதா மீது டான்ஸி வழக்கை நான் தான் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். இந்த வழக்கிற்கு தடை கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றம் சென்று, அங்கு அது தள்ளுபடி செய்யப்பட்டு பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்றார். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு அதே வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க மாற்றி அரசு உத்தரவிட்டது. இதில் (டான்ஸி நில வழக்கு), நான் போட்ட வழக்கும் அப்படியே இருக்கிறது. அரசு போட்ட வழக்கும் நிலுவையில் இருக்கிறது. அப்போது ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில், ‘ஏற்கனவே ஆர்.எஸ். பாரதி என் மீது வழக்கு போட்டிருக்கிறார். தற்போது அரசு தரப்பில் இருந்து ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. ஒரே குற்றத்திற்காக இரண்டு வழக்கு போடக்கூடாது’ என மனுத் தாக்கல் செய்தார்.

 

அப்போது தான் நான், என் வழக்கை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். அதே சமயம் இந்த வழக்கில் தீர்ப்புக்கு பிறகு நான் மேல்முறையீடு செல்ல அனுமதி தரவேண்டும் எனும் நிபந்தனையுடன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வழக்கை திரும்பப் பெற்றேன். பிறகு அவர் உயர் நீதிமன்றத்தில் விடுதலையானவுடன் நான் நிபந்தனையுடன் திரும்பப் பெற்ற வழக்கால் தான் அவர் மீது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிந்தது. அதன்பிறகு தான் அவர் அந்த நிலத்தை திரும்ப ஒப்படைப்பதாக சரண்டர் ஆனார். இதேபோல் தான் எடப்பாடி மீது ரூ. 4000 கோடி ஊழல் வழக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அதனை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது முதலமைச்சராக எடப்பாடி இருந்தார். அவர் உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என வழக்கில் தடை வாங்கினார்.

 

மீண்டும் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது நான் சி.பி.ஐ. விசாரணை வேண்டாம் மாநில காவல்துறையே விசாரிக்கட்டும் என்று ஒப்புக்கொண்டேன். தற்போது மாநில காவல்துறை விசாரணையை துவங்கியுள்ளது. இதை அப்படியே உல்டாவாக நான் ஏதோ பயந்து திரும்ப பெற்றதுபோல் சொல்லியிருக்கிறார். திமுகவினருக்கு பயம் என்றதே கிடையாது என எடப்பாடிக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்கள் மீது சொன்ன அத்தனை குற்றச்சாட்டுகளையும் திமுக நிரூபித்து காட்டியுள்ளது; அனைவரும் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர். எடப்பாடி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்கள் மீது விசாரணை துவங்கியுள்ளது. உங்கள் தலைவருக்கு ஏற்பட்ட தண்டனை போலவே உங்களுக்கும் ஏற்படும்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.