Skip to main content

கரோனா இல்லாத சிவகங்கை... சாதித்த மாவட்ட ஆட்சியர்!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

sivagangai district coronavirus recovered over district collector

 

ஈரோடு, தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டங்களின் வரிசையில் கரோனா இல்லாத மாவட்டமாக சாதனை படைத்தது சிவகங்கை. கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த மொத்தமுள்ள 12 நபர்களில் இறுதியாக இருந்த ஒருவரும் இன்று (02/05/2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியது சிவகங்கை. இத்தகைய சாதனைக்குச் சொந்தக்காரர் இம்மாவட்டத்தின் ஆட்சியாளர் ஜெயகாந்தனே எனச் சிலாகிக்கின்றனர் பொதுமக்கள்.

ஆளும் அரசுகளின் கரோனா வைரஸ் தொற்று அறிவிப்பு வெளியான நாள் முதலே மாவட்டம் முழுமைக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு கிருமி நாசினிகளைத் தெளிப்பது, கபசுர குடி நீரை மக்களுக்கு அளிப்பது எனப் பனிகளை முடுக்கிவிட்ட மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், பணிகள் முறையாக நடைபெறுகின்றதா..? எனப் பணி நடைபெறும் இடத்திற்கே சென்று பார்வையிட தொய்வில்லாமல் சுகாதாரப்பணிகள் நடந்தேறியது. அதே வேளையில் கரோனா தொற்று பாதித்துள்ளதா.? மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு மருத்துவப் பரிசோதனைகளையும் தொடர்ச்சியாக நடத்த, மாவட்டத்திலேயே முதன்முதலாக 30.03.2020 அன்று திருப்பத்தூர் நகர்ப்பகுதியில் 3 நபர்களுக்கும், இளையான்குடி நகர்ப்பகுதியில் 1 நபருக்கும், தேவகோட்டை நகர்ப்பகுதியில் 1 நபருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
 

sivagangai district coronavirus recovered over district collector


அதனைத் தொடர்ந்து 09.04.2020 அன்று திருப்பத்தூர் நகர்ப்பகுதியில் 14 வயது ஒரு பெண்ணிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட அவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 30.03.2020 அன்று முதல் சிகிச்சை பெற்று வந்த 5 நபர்களில் 4 நபர்கள் பூரண குணமடைந்ததையொட்டி, 15.04.2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட,. மீதமுள்ள 1 நபர் 21.04.2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து 09.04.2020 அன்று சிகிச்சை பெற்று வந்த 14 வயது பெண் 22.04.2020 அன்று பூரண குணமடைந்தையொட்டி அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 

இதே வேளையில், காரைக்குடி நகர்ப்பகுதியின் நடந்த மருத்துவப் பரிசோதனையில் 4 வயது பெண் குழந்தைக்கும், திருப்பத்தூர் நகர்ப்பகுதியில் நடந்த மருத்துவப் பரிசோதனையில் 4 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையொட்டி, மொத்தமுள்ள 5 நபர்களும் 13.04.2020 அன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து  19.04.2020 அன்று திருப்பத்தூர் நகர்ப்பகுதியில் 1 நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட அவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 
 

sivagangai district coronavirus recovered over district collector


தொடர் சிகிச்சையின் விளைவாக 13.04.2020 அன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 5 நபர்களும் பூரண குணமடைந்ததையொட்டி 27.04.2020 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இறுதியாக 19.04.2020 அன்று சிகிச்சைக்கு வந்த நபர் பூரண குணமடைந்ததையொட்டி இன்று (02/05/2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட கரோனா இல்லாத மாவட்டமாக மாறியது சிவகங்கை. இதற்காக மருத்துவச் சேவையில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கியதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நன்றியினை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

sivagangai district coronavirus recovered over district collector


 

http://onelink.to/nknapp


"கரோனா இல்லாத மாவட்டங்களில் இதுவும் ஒன்று என்ற இலக்கை அடைவதற்கு முழுக்காரணம் ஆட்சியர் ஜெயகாந்தனே! மாவட்டம் கபசுர குடிநீரை வழங்க ஏற்பாடு செய்தவர், சித்த மருத்துவர் சொக்கலிங்கம் பிள்ளை ஓலைச்சுவடிகள் மூலம் ஆய்வு செய்து தயாரித்த வாத பித்த கப விஷ சுர கசாயத்தினை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தங்கி சிகிச்சை எடுத்த கரோனா தொற்று நோயாளிகளுக்கும் தருவித்ததும் குறிப்பிடத்தக்க ஒன்று. அதே வேளையில், மாவட்டத்திலுள்ள நலிவடைந்த மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தாலுகாவிலுள்ள வருவாய்த்துறையினர் மூலம் அரிசி உள்ளிட்ட மளிகை, காய்கறிகளையும் வழங்கியதும், தன்னார்வலர்களைக் கொண்டு சாலையோரம் வசிக்கும் மனிதர்களுக்கு உதவும் நோக்கில் சாப்பாடு வழங்கி வந்ததும் இவருடைய அரும்பணிகளில் ஒன்று. இவர் இல்லையேல் எதுவும் சாத்தியமில்லை." என்கிறார் காரைக்குடி ஊற்றுகளின் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ஜான்பால்.



 

சார்ந்த செய்திகள்