Skip to main content

தமிழகத்தில் 8 ஆயிரத்தை கடந்தது கரோனா... உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆக உயர்வு!!!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
 Corona crosses 8,000 in Tamil Nadu

 

தமிழகத்தில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 798 ஆக உள்ளது. தற்போதுவரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரேநாளில் 538 பேருக்கு இன்று கரோனா பாதிப்பு  உறுதிசெய்யபட்டதால்,  சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.


திருவள்ளூரில் ஒரே நாளில் 97 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டில் ஒரே நாளில் 90 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் 6 பேர் உயிரிழந்ததால், கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 53 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 5 பேர், கன்னியாகுமரியில் ஒருவர் என ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் ஒரே நாளில் 92 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை 2,051 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 5,895 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்