Skip to main content

'ரூட் தல' பேனருடன் வந்த கல்லூரி மாணவர்கள்; தடுத்து நிறுத்திய போலீசார் 

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
College students with 'Root Thala' banner; Stopped by the police

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு சில மாணவர்கள் பேருந்தில் பேனருடன் வந்த நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு கல்லூரியின் கேட்டையும் மூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் 'ரூட் தல' என்ற பேனருடன் பேருந்தில் வந்ததோடு ஊர்வலமாக செல்லமுயன்றனர். உடனடியாக அங்கிருந்த போலீசார் குறிப்பிட்ட மாணவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து பேனரை பறிமுதல் செய்து அறிவுரை செய்த அனுப்பி வைத்தனர்.

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கிய நிலையில் அந்தந்த ரூட்டில் இருக்கக்கூடிய மாணவர்கள் ஒன்று சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கிறோம் என்ற பெயரில் தாமதமான நேரத்தில் ஊர்வலமாக பேனர் மற்றும் மாலையோடு கல்லூரி வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றனர். இதையறிந்த கல்லூரி முதல்வர் நுழைவாயிலை பூட்டுப் போட்டுவிட்டு சென்று விட்டார். அதனைத்தொடர்ந்து ஆவடியைச் சேர்ந்த சில மாணவர்கள் கையில் பேனர் உடன் ஊர்வலமாக செல்ல முயன்ற நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பிவைத்தனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் படுகொலை; பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Armstrong incident Bahujan Samaj party struggle

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Armstrong incident Bahujan Samaj party struggle

கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கூடுதல் காவல் ஆனையர் அஸ்ரா கார்க் காரை பகுஜன் சமாஜ் கட்சியினர் வழிமறித்து போராட்டம் நடத்தினர். 

Armstrong incident Bahujan Samaj party struggle

மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இயக்குநர் பா. ரஞ்சித் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குடும்பம் நடத்திய பெண் பிரிந்து சென்றதால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
tragic decision taken by  man because woman  away

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பொம்மன்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவ்வப்போது வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித் திரிந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒருவருடத்துக்கு முன்னர், சேலம் மாவட்டம், பூலாம்பட்டியைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவரைக் கூட்டி வந்து மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது அவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண் கடந்த 2-ஆம் தேதி சண்டையிட்டுக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, மணிகண்டனின் தந்தை பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.