Published on 08/04/2020 | Edited on 08/04/2020
சென்னை பெரியமேட்டில் ரகசியமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் கரோனா அறிகுறி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் மீதும் தொற்றுநோய் பரப்புதல் உள்பட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பெரியமேடு காவல்துறை அவர்களைக் கைது செய்துள்ளனர். கைதான மூன்று பேருக்கும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![chennai periyamedu police Bangladesh peoples](http://image.nakkheeran.in/cdn/farfuture/wFAaS3jnl4yJ6w8Mo3kNapoLeDgcHKyxQHHhSFcyOGY/1586326631/sites/default/files/inline-images/bus999.jpg)
ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கியிருந்த இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களும் கரோனா பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.