Skip to main content

பாலியல் தொழில்; அதிரடி காட்டும் உதவி ஆணையர்!

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

Brokers arrested in Chennai

 

சென்னை மடிப்பாக்கத்தில் வெளி மாநிலப் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாலியல் தொழில் புரோக்கரை பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு இணையதளம் மூலம் நடக்கும் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

சென்னையில் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வெளி மாநிலப் பெண்களைத் தனது கட்டுப்பாட்டில் தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில், காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் தனி படையினர் அவ்விடத்திற்குச் சென்று வெளிமாநிலப் பெண்களை காரில் அழைத்து வந்து கஸ்டமர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் வைத்து புரோக்கர் சோமன் சால்மன் என்பவரை கைது செய்து, அவர்கள் பிடியில் இருந்த வெளி மாநிலப் பெண்களை மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரிடமிருந்த கார் மற்றும் செல்போன் லேப்டப் போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

 

மேலும் விசாரணையில் சென்னையில் பல பாலியல் தொழில் புரோக்கர்களுக்கு வெளிமாநிலப் பெண்களை கோவிலம்பாக்கத்தில் உள்ள ராஜா நகர் என்னும் இடத்தில் இந்த பெண்களை தங்க வைத்து எல்லா புரோக்கர்களுக்கும் சப்ளை செய்து வந்துள்ளார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு ஆலந்தூர் நீதிமன்றம் கொண்டு சென்று  நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மீட்கப்பட்ட பெண்களைப் பாதுகாப்பு கருதி சென்னை மயிலாப்பூர் அரசினர் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஜூன் வரையிலும் லோகேன்டோ ஆப்ஸ், ஜஸ்ட் டெல் ஆப்ஸ் செய்திகளில் மற்றும் ரகசிய தகவல்களின் மூலமாகவும் சுமார் 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

மேலும் அவர்களது பிடியில் இருந்த 175 பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களது பாதுகாப்பு கருதி சென்னை மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 14 குற்றவாளிகளின் மீது தடுப்பு காவல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலியல் தொழில் குற்ற வழிவகை செய்யும் இணையதளங்களை முடக்கும் முயற்சிக்காக லொக்கோட்டோ செயலி மற்றும் இணையதளப் பக்கங்களை முடக்குவதற்கு மாநில சைபர் கிரைம் பிரிவு மூலமாக மெய்டி மினிஸ்ட்ரி ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கவர்மெண்ட் ஆப் இந்தியா மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் டிஜிட்டல் மீடியா எதிக்ஸ் கோட் ரூல்ஸ் 2021 மூலம் லோகேன்டோ செயலி மற்றும் இணையதள பக்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறையின் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் டிஜிட்டல் சர்வீஸ் டிபார்ட்மென்ட் தமிழ்நாடு செயலாளர் அவர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய  ஏ.வி.எஸ்., ஏ.சி. ராஜலட்சுமி, “சென்னை கமிஷ்னர் உத்தரவின் பெயரில் தீவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் டீமை அழைத்து கமிஷனர் பாராட்டியும் உள்ளார். இது மேலும் எங்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. ஆன்லைன் குற்றங்களை தடுக்கும் வகையில்,  ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுக்கும் அனுப்பியுள்ளோம். அது மட்டும் கிடைத்தால் முழுமையாக குற்றங்களை தடுத்துவிட முடியும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.