Skip to main content

நாடாளுமன்ற தேர்தல்:தொகுதியை அறிவோம் – அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குள், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, இராணிப்பேட்டை, காட்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர் என 3 தொகுதிகளில் அதிமுகவும், ஆற்காடு, இராணிப்பேட்டை, காட்பாடி என 3 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றது.

 

election

 

1967ல் திமுக சம்மந்தம், 1971, 1977ல் காங்கிரஸ் அழகேசன், 1980ல் காங்கிரஸ் வேலு, 1984, 1989, 1991ல் காங்கிரஸ் ஜீவரத்தினம், 1996ல் தமாக வேலு, 1998 அதிமுக கோபால், 1999 திமுக ஜெகத்ரட்சகன், 2004ல் பாமக வேலு, 2009ல் திமுக ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றனர். இந்த தொகுதியில் 1977க்கு பின் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தே காங்கிரஸ் வெற்றி பெற்றுவந்துள்ளது. 2004ல் வெற்றி பெற்ற பாமகவும் திமுக கூட்டணியில் இருந்ததால் வெற்றி பெற்றது.

 

 

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ஹரி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஹரி பெற்ற வாக்குகள் 4,93,534, திமுக வேட்பாளர் இளங்கோவன் பெற்ற வாக்குகள் 2,52,768, பாமக வேட்பாளர் வேலு பெற்ற வாக்குகள் 2,33,762, காங்கிரஸ் நாசே.ராஜேஷ் பெற்ற வாக்குகள் 56,337 ஆகும்.

 

இந்த தொகுதியை பொருத்தவரை வன்னியர், தலித், முதலியார், இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ளனர். விவசாயம் தான் இந்த தொகுதி மக்களின் பிரதான தொழில், அதற்கடுத்து நெசவு தொழிலாகும். மேலும் தொழில் வளர்ச்சி உள்ள தொகுதியிது. அரக்கோணத்தில் ரயில்வே தொழிலாளர்களும், ராணிப்பேட்டை பகுதியில் டெல் உட்பட பல தொழிற்சாலைகளும், ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதியில் தோல் தொழிற்சாலைகள் பரவலாக உள்ளதால் தொழிலாளர்கள் அதிகமும்முள்ள தொகுதியாகவும் உள்ளது.

 

தற்போது இந்த தொகுதியில் சுமார் 14 லட்சத்துக்கு 74 ஆயிரத்துக்கு 133 பேர் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் சுமார் 30 ஆயிரம் பேர் அதிகம் என்பது குறிப்பிடதக்கது. சுமார் 41 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

தொகுதி மக்களுக்கான தேவைகள்…….

 

1.   அரக்கோணத்தில் மூடிவைக்கப்பட்டுள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையை மீண்டும் திறந்து,               உள்ளுர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

2.   சோளிங்கர் நகரில் உள்ள நரசிங்கபெருமாள் கோயில்க்கு ரோப் கார் அமைத்து தர வேண்டும்.

3.   ஆசியாவில் மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை             நகரை தூய்மை நகராக மாற்ற வேண்டும்.

4.   அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.

5.   திண்டிவனம் டூ நகரி இரயில் பாதை திட்டத்தை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும்.

6.   சோளிங்கர் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி உருவாக்க வேண்டும்.

 

கடந்த முறை எம்.பியாக, மத்தியஅமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன், சென்னை டூ பெங்களுரூவுக்கு எக்கனாமிக்கல் காரிடர் கொண்டு வருவதற்கான பணியை செய்து வெற்றி பெற்றார். அதன்பின் வந்த பாஜக ஆட்சி அதனை நிறைவேற்றவில்லை. அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துயிருந்தால் சுமார் 1 லட்சம் பேருக்கு நேரடியாக - மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் என்கிறார்கள். அதனை சுட்டிக்காட்டி வாக்கு கேட்கவுள்ளார் என்கிறார்கள்.

 


தேர்தல் களத்தில் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அதிமுக கூட்டணியில் பாமகவின் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகிய இருவரும் மோதலில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.