Skip to main content

கிறிஸ்தவ பாதிாியாா்கள் மீது அடுத்தடுத்து கூறப்படும் பலாத்காரம் சம்பவம் : கிறிஸ்தவ மக்கள் அதிா்ச்சி!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018

கேரளாவில்  கிறிஸ்தவ பாதிாியாா்கள் மீது அடுத்தடுத்து கூறப்படும் பலாத்காரம் சம்பவம் கிறிஸ்தவ மக்களிடத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சமீபத்தில் கோட்டயத்தில் மலங்கரை கத்தோலிக்க சபையில் பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண்ணை பாதிாியாா்கள் ஜேக்கப் மாத்யூ, ஜெஸ்சி ஜாா்ஜ், ஜாக்சன் மேத்யூ, ஆப்ரகாம் வா்க்கீஸ் ஆகியோா் கூட்டு பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகாா் கொடுத்திருந்தாா். இதையொட்டி அந்த பாதிாியாா்கள் நான்கு பேரும் தலைமறைவானாா்கள். 
 

 

 

இந்த சம்பவம் நாடு முமுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தை தொடா்ந்து திருச்சூா் முள்ளங்கல்லை சோ்ந்த சிரோ மலபாா் கத்தோலிக்க சபையின் ஜலந்தா் நகா் பிஷப் பிராங்கோ  கோட்டயம் குரவிலங்காட்டை சோ்ந்த கன்னியாஸ்திாி ஒருவரை 13 முறை பலாத்காரம் செய்ததோடு செல்போனில் ஆபாச படங்களையும் அனுப்பியுள்ளாா். இதை கன்னியாஸ்திாி அந்த கிறிஸ்தவ சபையின் உயா் பொறுப்பில் இருந்தவா்களிடம் கூறியும் அவா்கள் அந்த பிஷப் மீது நடவடிக்ககை எடுக்கவில்லையாம்.  இதனால் கன்னியாஸ்திாி போலீசில் புகாா் கொடுத்தாா். இதை தொடா்ந்து பிஷப் பிராங்கோ தலைமறைவானாா். போலீசாா் தற்போது அவரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளனா். 


 

The alleged rape incident on Christian Hafizas



 

இந்த நிலையில் அடுத்த சம்பவமாக குடும்ப பிரச்சனையை  தீா்த்து வைப்பதாக கூறி இரண்டு குழந்தைகளின் தாயை பாதிாியாா் பலாத்காரம் செய்ததாக காயங்குளம் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகாா் கொடுத்துள்ளாா். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப பிரச்சனையை தீா்க்க  காயங்குளம் ஆா்த்தோடக்ஸ் சா்ச் பாதிாியாா் பினு ஜாா்ஜ்யிடம் சென்றுள்ளாா்.  பெண்ணை விட பாதிாியாா் இளையவா் அவா் பிரச்சனையை தீா்த்து வைப்பதாக கூறி ஆலோசனை வழங்குவது போல் அந்த பெண்ணை பாதிாியாா் மிரட்டி பலாத்காரம் செய்தாராம். 
 

 

 

இதனால் அந்த பெண் கணவரோடு சென்று ரான்னியில் பிஷப்பிடம் கூறியும் அவா் பாதிாியாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனையடுத்து அந்த பெண் போலீசில் புகாா் கொடுத்துள்ளாா்.  தற்போது இந்த பலாத்கார சம்பவமும் கேரளாவில் கிறிஸ்தவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகளுக்கு அடிக்கடி நடக்கும் பாலியியல் தொந்தரவுக்கிடையில்  பாதிாியாா்களின் பலாத்கார சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.