Skip to main content

புழலிலிருந்து வீடு திரும்பிய 67 கைதிகள்...

Published on 06/06/2018 | Edited on 07/06/2018

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு செய்துள்ள 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு ஜூன் 4ம் தேதி அறிவித்தது. மேலும் இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் அரசாணைகள் மூலம் நெறிமுறைகள் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடட்டிருந்தது.

 

puzhal



இதில் முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் 67 பேரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதில் ஆதாயக் கொலை, போதைப் பொருள் கடத்தல், வெடிபொருட்கள் பதுக்கல், அரசு சொத்துகளை சேதப்படுத்தியது, உள்ளிட்ட குற்றங்களில் கைதானவர்கள் முன் விடுதலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்றும் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் முன் விடுதலை கிடையாது என்றும் கூறியுள்ளது. இதன் அடிப்படையில், சிறையில் உள்ள நன்னடத்தை பரிந்துரைக் குழு தயார் செய்த பட்டியலின் படி புழல் சிறையில் உள்ள 67 கைதிகளும் இன்று காலை 10.30 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

 

puzhal


 

puzhal

 

ஆயுள் கைதிகளை விடுவிக்கும் இந்த நிகழச்சியில் ஏடிஜிபி அசோக் சுக்லா மற்றும் டிஐஜி முருகேசன் கலந்து கொண்டு விடுதலையாகும் கைதிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினர். இவர்களை அழைத்து செல்ல அவர்களது குடும்பத்தினர் வந்துள்ள நிலையில் விடுதலையாகும்  கைதிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சிறைதுறை தலைவர் பேசுகையில், தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார். அதன் பின்பு விடுதலையாகும் அனைவரும் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் குற்ற செயல்களில் ஈடுப்பட கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் விடுவிக்கப்பட்டவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.