Published on 02/07/2020 | Edited on 02/07/2020
இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 3000 ரூபாய் நிதி உதவி வழங்குவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வறுமையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மூன்றாயிரம் உதவித்தொகை இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏழ்மையான மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படும். தற்பொழுது கரோனா காரணமாக வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் பணியை விட்டு வேறு பணிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.