Skip to main content

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

26 people admitted to hospital after eating chicken rice!

 

கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்து, சீல் வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் கடையின் உரிமையாளர்களைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். 

 

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று இரவு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் உணவகத்தில் நேற்று இரவு 150 பேருக்கு சிக்கன் ரைஸ் வாங்கி செல்லப்பட்டது. அதைச் சாப்பிட்ட வடமாநிலத்தவர் 26 பேருக்கு உடல்நிலை பாதிப்பு வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டதைத் தொடர்ந்து,  கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்