Skip to main content

ஓபிஎஸ்க்கு எதிராக திமுகவில் இணையப் போகும் ஓ.ராஜா?

Published on 20/12/2018 | Edited on 20/12/2018


துணை முதல்வர் ஓபிஎஸ்சின் உடன் பிறந்த சகோதரரான ஒ.ராஜா நேற்று மதுரை
 ஆவீன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மாவட்டசெயலாளரும், ஏம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் ஓ.ராஜாவுக்கு மாலை, சால்வை போட்டு வாழ்த்தினார்கள்.   இந்த
 சந்தோஷம் தொடர்ந்து நீடிப்பதற்குள் மதியமே ஓ.ராஜாவை  கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் அதிரடியாக நீக்கினார்கள்.  இந்த விஷயம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

raja


     திடீரென கட்சியின் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தூக்கியதை கண்டு ஓ.ராஜாவும் அவருடைய ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


.

  இது சம்பந்தமாக தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.ராஜாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது.... சமீபகாலமாகவே அண்ணன் ஓபிஎஸ் ராஜா அண்ணணை மதிப்பதில்லை.  தன் குடும்பத்தில் உள்ள மகன்களுக்குத்தான் அரசியலில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாரே தவிர அந்த ராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அதனாலதான் இந்த ஆவின் தலைவர் பதவியை போட்டு கொடுங்கள் என ராஜா கேட்டு இருக்கிறார் அதற்கு ஓபிஎஸ்சும் சரி என்று சொன்னதின் பேரில் போடி அதில் உள்ள பால் கூட்டுறவு  தேர்தலில் போட்டியிட்டு இயக்குனராக வெற்றி பெற்றார். அதன் பின் திடீரென அண்ணன் ஓபிஎஸ் இப்போதைக்கு அந்த தலைவர் பதவி வேண்டாம்.  பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அண்ணன் ராஜாவை நம்பவைத்து ஓபிஎஸ் ஏமாற்ற பார்த்தார்.  அதனாலதான் அண்ணன் ராஜா மற்ற இயக்குனர்களை கைக்குள் போட்டுக்கொண்டு தலைவராக  தேர்வு செய்யப்பட்டார்.

 

ip

 

 அது பிடிக்காமல் தான் ஒரு சில அமைச்சரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஓபிஎஸ் - இபிஎஸ் சேர்ந்து அண்ணனை கட்சியில் இருந்து திடீரென நீக்கிவிட்டனர்.  இருந்தாலும் பரவாயில்லை அண்ணன் ராஜாவின் நீண்ட காலம் ஆசையே  ஆவின் தலைவர் பதவி தான்.  தற்போது அதிமுக கட்சியில் இருந்து தூக்கினாலும் அண்ணன் ஆவின் தலைவராகவே நீடிப்பார்.  அதற்கான மறைமுக வேலையில்  ஈடுபட்டு வருகிறார்.  அதோடு அண்ணன் ராஜாவை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதால் அதற்கு பழிக்குப்பழியாக கூடிய விரைவில் திண்டுக்கல்லில் உள்ள திமுக துணைபொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி முன்னிலையில்  அண்ணன் ஒ.ராஜா தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைய போவதற்கான  பேச்சுக்கள் நடந்து வருவதால் கூடிய விரைவில்  அண்ணன் ஓ. ராஜா  ஐ.பி. முன்னிலையில் திமுகவில் சேரப் போகிறார். அதன் மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ்சின் செல்வாக்கும் ஒட்டுமொத்தமாக சரிய போகிறது என்று கூறினார்கள்.  அதுபோல் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சியினர் மற்றும் ஓபிஎஸ்சின் உறவினர்கள் மத்தியிலும் ஓ. ராஜா திமுகவுக்கு போகப் போகிறார் என்ற பேச்சு மாவட்டம் முழுவதும் பரவலாக  ஒலித்துக் கொண்டு தான் வருகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓபிஎஸ் கண் முன்னே டி.டி.வி. தினகரன் காலில் விழுந்த ஓ. ராஜா

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

O Raja fell at the feet of TTV Dinakaran in front of OPS

 

கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

அந்தக் கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், ''நான் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் கொடநாடு பங்களாவில் நிகழ்த்தப்பட்ட கொள்ளையையும், கொலையையும் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்குவேன் என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அந்த உறுதிமொழியை சொல்லித்தான் அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்றைக்கு 30 மாதங்கள் ஆகிவிட்டன. முப்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இந்த வழக்கு இன்னும் ஆமை வேகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. முப்பது மாதங்கள் ஆன பின், இந்த வழக்கை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் ஒரு போர்வையை இன்றைக்கு போர்த்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

 

அந்தக் கூட்டத்தில் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் மடியிலே கணம் இல்லாதவர்கள், நெஞ்சிலே ஈரம் உள்ளவர்கள். ஜெயலலிதாவின் மையப் புள்ளியில் இணைந்திருப்பவர்கள் எல்லாம் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிணைந்துவிட்டோம். இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் உண்மையான தொண்டர் படை. ஆனால், அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் குண்டர் படை. எங்களுக்கு பொழுது போகவில்லை அதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறோம் என்று ஒருவர் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், அச்சாணி இல்லாத வண்டி என்று அ.ம.மு.க வை சொல்கிறார். எங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் வீட்டில் இருப்போம். ஆனால், அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்து பாடி சிந்துபாத் வேலையை பார்ப்பார்கள்'' என்றார்.

 

இந்த போராட்டத்தின் தொடக்கத்தில் அங்கு வந்த ஓ. ராஜா, ஓ. பன்னீர்செல்வத்தின் முன்னிலையிலேயே டி.டி.வி தினகரனுக்கு சால்வை அணிவித்ததோடு சடாரென்று எதிர்பாராத விதமாக டி.டி.வி. தினகரனின் காலில் விழுந்தார். 

 

 

Next Story

ரூ.1.50 கோடி சொத்தை அபகரிக்க ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா முயற்சி! - தேனி எஸ்.பி.யிடம் புகார் 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Land fraud case on ops brother o raja

 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள வில்பட்டியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் உள்ள சொத்தை, தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா அபகரித்து விற்பனை செய்ய முயற்சித்து மிரட்டல் விடுவதாக தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்க்ரேவிடம் நில உரிமையாளர் புகார்.  

 

அந்த புகாரில் கூறியிருப்பதாவது; ‘என் மனைவி சந்தானலெட்சுமி பெயரில் ஒரு ஏக்கர் 83 சென்ட் தோட்டம் வில்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தை எனது மகளின் திருமணத்திற்காக விற்க முடிவு செய்தோம். இதற்காக கடந்த 2010ல் பெரியகுளத்தில் ஓ.பிஎஸ். தம்பி ஓ.ராஜாவின் உறவினர் தென்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன் மூலம் தொடர்பு கொண்டார். சொத்தின் அப்போதைய மதிப்புத் தொகை ரூ.40 லட்சம் வழங்குவதாக கூறியதை நம்பி கிருஷ்ணன் பெயரில் 2010 ஆகஸ்ட் 19ல் பொது அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தோம். 

 


அதன்பின் ஓ.ராஜாவும் கிரைய தொகை ரூ.40 லட்சத்தை மூன்று மாதங்களில் தருவதாக கூறினார்; ஆனால் தரவில்லை. இந்த நிலையில் கிருஷ்ணன் எங்கள் அனுமதியின்றி பொது அதிகார பத்திர உரிமையை பயன்படுத்தி சொத்தை வேறு ஒரு நபருக்கு விற்க முயற்சித்துள்ளதை தெரிந்து பவர் ஆப் அத்தாரிட்டி உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தினோம். 

 


பணத்தை தர மறுத்து ஓ.ராஜா மிரட்டினார். பின் அவருக்கு பயந்து 2011ல் அக்டோபரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தோம். அப்படியிருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் கடந்த 2011 நவம்பர் 4ல் தென்கரை விஜயகுமாருக்கு சொத்தை விற்க முயன்றனர். விஜயகுமார் சொத்தின் உரிமையாளர் கையெழுத்தின்றி சொத்தை வாங்க மறுத்துள்ளார். இந்நிலையில ஓ.ராஜா, கிருஷ்ணன் ஆகியோர் என்னை மிரட்டி கையெழுத்திட நிர்பந்திக்கின்றனர். இதனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யும் விசாரணையை தொடங்கி இருக்கிறார்.