Skip to main content

நிர்மலாதேவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் - உயர் கல்வித்துறை அமைச்சர் 

Published on 17/04/2018 | Edited on 17/04/2018
ministers


   

  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மணியன் வரவேற்று பேசினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி, ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தமிழியல்துறைத் தலைவர் அரங்க. பாரி அறிமுக உரையாற்றினார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தருமான கே.பி.அன்பழகன் பங்கேற்று நூற்றாண்டு விழா மலரினை வெளியிட்டார்.  அதை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் பெற்றுக் கொண்டார். 

 

     இதையடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். பின்னர் அமைச்சர்கள் அன்பழகன், சம்பத், எம்எல்ஏக்கள் சிதம்பரம் தொகுதி பாண்டியன், காட்டுமன்னார்கோவில் தொகுதி முருகுமாறன் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் எம்ஜிஆர் கல்வி பணி குறித்தும், சமூக பணிகள் குற்றித்தும் பேசினார்கள்.  இதையடுத்து விழா முடிந்த பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,


 
      அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  சுமார் 3 ஆயிரத்து 500 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தனி அதிகாரிகள், தொடர்பு அதிகாரிகள் பணிக்கு அதிகமான ஊதியம் பெற்று வருவதால் அவர்களது ஊதியத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

 

      பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை பொறுத்தவரை தேடுதல் கமிட்டிக்கு உறுப்பினரை தேர்வு செய்வது மட்டுமே அரசின் பணியாகும் எனக் குறிப்பிட்டார்.  பின்னர் அருப்புக்கோட்டை சம்பவத்தை பொறுத்தவரை மார்ச் மாதம் 15ந் தேதி நடந்துள்ளது. மறுநாள் 16ந் தேதியே கல்லூரி முதல்வரிடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். பின்னர் சம்மந்தப்பட்ட பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

 

     இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை நடத்தி, அதன் உண்மை தன்மை அறிந்த பிறகு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த விஷயத்தில் தொடர்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு  யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Tamil Nadu Engineering Consultation Starts Today
மாதிரி படம்

 

தமிழ்நாட்டில் உள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டில்  ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 காலி இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. ஏற்கனவே இதற்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த புதிய அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி, சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது

 

அந்த வகையில், இன்று முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக  கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜூலை 28 ஆம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக பொதுக் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 9 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை 2 ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 3 ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

 

 

Next Story

அவதூறு பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு நடத்தி செல்லும் போக்கில் பேசிய பேராசிரியர் நிர்மலாதேவியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகள் நால்வரிடம் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தும் வகையில், தவறான முறையில் பேசிய ஆடியோ வெளியாகி பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு நேற்று கைதுசெய்யப்பட்டு விடிய விடிய போலீசார் விசாரித்து வந்தனர்.

 

nirmala



இதன் அடுத்தகட்டமாக இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்று செல்போன்களில் பல்வேறு பெண்களின் புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. 

 

இதில் மேலும் ஒரு புது திருப்பமாக இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.